சனி, 28 ஜூன், 2025

சமஸ்கிருதம் சென்ற தமிழ்த்தொடர்.

'' நமைக்காக்க!'' என்பது பலர் இணைந்து வேண்டும் ஒரு குழுவினரின் குரலாக ஒலிக்கின்ற வரை  அது ''நமைக்காக்க வேண்டும் இறைவனே'' என்ற வேண்டுதலை முன்வைக்கும் ஒரு சொல்லாக இருந்தது. அது மந்திர மொழியாகி அதே வேண்டுதலையே முன்வைத்தால், அது மாற்றமின்றித் தொடர்ந்திருக்கலாம்.  அல்லது காலப்போக்கில் திரிபு அடைந்திருக்கவும் கூடும்.  இவ்விரண்டனுள் எது நடந்திருக்கும் என்பதை  நமஹா என்ற சமஸ்கிருதச் சொல்லே காட்டுகின்றது..  நமைக்காக்க என்ற தமிழ்த் தொடர்,  நமஹா என்ற ஒரு சொல்லாக மாறியமைந்துவிட்டது.

இப்படி மாற்றம் அடைந்ததனால் மொழிக்கு ஒரு சொல்லால் ஒரு சிறு வளர்ச்சி ஏற்பட்டது.  நமஹா என்ற புதிய சொல் சமஸ்கிருத மொழிக்குக் கிட்டியது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 

மொழிகளில் ஒன்றன் அணைப்பினால் இன்னொன்று வளர்தல் என்பது எல்லா மொழிகளிலும் காணப்ப்படுகின்ற ஒரு தன்மையே ஆகும்.  இப்படித் தமிழின் ஒரு தொடர் சற்று மாற்றமடைந்து சமஸ்கிருதத்தைச் சற்று வளப்படுத்தியது வரவேற்கத் தக்கதொன்றே  ஆகுமென்று உணர்க. இரண்டும் இந்திய மொழிகளே  ஆகும் என்பதும்  அறியற்பாலது ஆகும்.

ஏறத் தாழ  எழுநூறு  எண்ணூறு தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன என்று கமில் சுவலபெல் சொன்னார்.  இன்னும் அதிகம் கண்டுபிடித்தனர் வேறு ஆய்வறிஞர்கள். நாமும் சிலவற்றைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறோம். இதனால் மொழிபற்றிய அறிவு முன்னேறுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.  தமிழ் இந்திய மொழிகளில் ஒன்று என்றும்  சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்றும் முன்னர் செய்த வெள்ளையரின் ஆய்வு சொன்னதனால்  மேலும் பல தமிழ்ச்சொற்களைச் சமஸ்கிருத்த்தில் கண்டுபிடிப்பதற்கு ஒரு மனத்தடை இருந்துவந்தது.  இதற்குச் சரியான காரணிகள் இல்லை. வெள்ளையர்தம் கற்பனை ஆய்வினால் ஏற்பட்ட  நிலையே இதுவாகும்.

இந்திய மொழிகள் இவை என்பது இப்போது புலப்படுதலால் ஒப்பீடு செய்வதற்கான தடை இப்போது இல்லை என்பது உணர்க.

நம- ஹா  என்பது நமைக்  கா என்பதன் திரிபே என்பதை  அறிய, பொய்மை தானே விலகிவிடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடைய இடுகை


ஞாயிறு, 22 ஜூன், 2025

வாயு அல்லது வாய்வு

 வாயு என்ற சொல்லைக் கவனிப்போம்.

வாய்த்தல் என்பது  வினைச்சொல். இது கிடைத்தல், கிட்டுதல் என்றிதற்குப் பொருள் கூறலாம். பெறுதல் என்று கூறவும் இடமுண்டு.  வாய் என்ற சொல்லுக்கு இடமென்ற பொருளும் இருக்கிறது.

வாய்வு என்பது உடலின் ஓரிடத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தில் உண்டாகி ஒருவித வலியையும் உண்டாக்கும் ''காற்றுத் தொல்லை என்று சொல்வார்கள். ஆங்கில வைத்தியத்தில் இதற்கு வேறு விளக்கங்கள் தரப்படும்.

இந்த ''வாய்வு'' உடலிலே உள்ளதன்று,  அது சில உணவுப் பழக்கங்களினால் வாய்க்கப்பெறுவது என்று சிலர் எண்ணினர். எடுத்துக்காட்டாக,  கடலைப் பருப்பு அதிகம் எடுத்துக்கொள்வதால் இது ஏற்படும் என்ற ஐயப்பாடும் உள்ளது.  ஆகவே வாய்க்கப்பெறுவது என்ற பொருளில் 'வாய்வு'' என்றனர்.  சமஸ்கிருதமும் இதற்கு இதே அடிச்சொல்லைக் கொண்டு  ''வாயு''  என்ற சொல்லை உருவாக்கியது.  வகர மெய் விடப்பட்டது.  வாய்வு என்னாமல் வாயு என்றனர்.

இந்த வாய்வுத் தொல்லை என்றால் அது வாய்க்கப்பட்டது என்பதுதான் பொருள்.

பாவாணர் இதை வாயினின்று வெளிப்படுவது என்று கருதினார்.

வாய்வு என்ற சொல்லே சரியானது.  ஆனால் தமிழர்களும் வாயு என்பதையே பின்பற்றினர். இதை நோயாகவே பார்க்கலாம்.

சமஸ்கிருதத்தில் இது பொதுப்பொருளில் வழங்குகிறது

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


 

வெள்ளி, 20 ஜூன், 2025

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி என்ற பெயரை இன்று ஆய்வு செய்கையில் இரு நன்மைகள் காண்கிறோம். ஒன்று, தட்சிணம் என்பதை உணர்வதுடன்  ; இரண்டு, மூர்த்தி என்னும் அழகான பெயரையும் தெரிந்து மகிழ்கிறோம்.

மூர்த்தி என்ற சொல் பலருக்கும் பெயராகவும் இலங்கும்  பெருமை கொண்டது.  தெய்வப் பெயர்களிலும் இணைந்து வருவது. கிருஷ்ண மூர்த்தி  இராமமூர்த்தி கணேச மூர்த்தி எனவெல்லாம்  காண்க.

வினைச்சொல்: முகிழ்த்தல்.  முகு: பொருள்: முன் சேர்தல். முன் வந்து தெரிவது. மு= முன்; கு = சேர்வுக் குறிப்பு. மு+கு > முக்கு,  பொருள் முன் அல்லது வெளிக்கொணர்தல்.  இழ் என்பது ஒரு விகுதி. பெயரிலும் வினையிலும் இழ் விகுதியாகும்.   இழ் என்பது ஓர் அடிச் சொல்லுமாகும்.  இழ் > இழு, இழை, இழி என்பவற்றில் வெவ்வேறு ஆனால் தொடர்புறு இயக்கங்களைக் குறிக்க வரும். ஆகவே தமிழ் என்றால் தனிமைப் பண்புடன் , சுவையுடன் பொருளுடன்  இயங்கும் மொழி என்று கொள்க.  ஆக, முகிழ் > முகிர் > மூர். + தி (விகுதி ) > மூர்த் தி :  முன்தோன்றும் தெய்வஉரு

தென்கணம் > தெற்கணம் > தெக்கணம் > தக்கணம் >  தட்சிணம். ( எ> அ). எ -  அ: தெரிசனம் - தரிசனம். சொன்முதல் திரிதல்.

தெற்கணம் பார்க்கும் தெய்வம் என்றாயிற்று. தெற்கணம் - தென்திசை.

கண் = இடம்   கணம் இங்கு நிலப் பகுதி.

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்ந்துகொள்க