பகிரங்கம் என்ற சொல் அறிந்தின்புறுவோம்.
பகிரங்கம் என்னும்போது ஒருவரை ஒருவர் அணுகி அதைப் பகிர்ந்துகொள்வர். அதைத்தான் பகிரங்கம் என்று சொல்கிறோம். பகிரங்கம் என்ற சொல் அமைந்த காலத்தில் பத்திரிகை இல்லை, அறைதல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்றால் அரசன் தகுந்த முறையில் தன் கீழதிகாரிகளிடம் சொல்லி முரசறையச் செய்து, கூவித் தெரிவித்தல். இதிலிருந்து பறைதல் என்ற சொல் கிளைத்தது. அப்படி வராமல் தகுந்த முறையிலின்றி அங்குமிங்குமாகப் பேசிப் பரவுவதுதான் தகவு+ அல். தகுந்த முறையில் அல்லாதது. தமிழரசுகள் மறைந்தபின் ''தகவு அல்'' - தகுந்த முறையில் இல்லாதனவே பரவின. இவ்வரசுகள் போகவே, அறைதல் என்ற சொல் வழக்கு இலதாகி, தகவல் என்பதே எஞ்சி நிகழ்ந்தது.
பகிர்ந்து அண்கு அம் > பகிர் அண் கு அம் > பகிரங்கம் ஆயிற்று. அண்கு அம்> அங்கமானது.
பகிரங்கம் என்ற சொல் உண்டானபோது அவர்களிடம் இருந்த பகிர்வு முறைகள் இன்றைய நிலையுடன் ஒப்பிடமுடியாதன.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக