புதன், 31 ஜூலை, 2024

பில்லி என்ற சொல்.

 ஒரு மந்திரவாதி தன் மந்திரத்தினால் தன்னுடன் அருகில் இல்லாத ஒருவனுடன் சென்று பொருந்துகிறான். இதையவன் மந்திர ஆற்றலினால் செய்கிறான். இது ஒருவகைப் பொருந்துதல்  ஆகும்.  பொருந்து என்றால் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தன் கட்டுக்குள் கொண்டுவருதல். இதற்குத் தமிழ் "புல்லுதல்" என்ற அடிச்சொல்லிலிருந்து ஒரு சொல்லைத் தருகிறது.

புல்(லுதல்).

புல்> புல்லு> புல்லி > பில்லி.

புல்லுதல்  என்றால் பொருந்தியிருப்பது.

அலலா வாயினும் புல்லுவ உளவே என்ற தொல்காப்பியத் தொடரில் 'இல்லாவிட்டாலும்' பொருந்தக்கூடியனவும் உள்ளன என்பது பொருள்.

இது புல்லி > பில்லி என்றானது.  புல்லு என்பதை ( புல் முளைத்திருப்பதை )ப் பில்லு என்று பலுக்குதல் காண்க. பிடுங்கு என்பது மாறி புகர முதலாய் வரும். இவற்றின் ஒலிநூல் இசைவை இதனின்று அறிக.

இதனை " தொலைவிற் புல்லுதல்"  எனல் தக்கது..

பிறர் எண்ணிச் செயவது என்ற பொருளில் சூனியம் எனப்படும்.  சூழ் உன்னுதல் > சூழ்ந்து உன்னுவது,  சூழுன்னியம் சுருங்கிச் சூனியம்  ஆகும்..

உன்னுதல் - இழுத்தல், உந்தல், கிளர்த ல், நினைத்தல், பாய்தல்,விரைந்தெ ழுப்பல்.

பிறர் பாய்விப்பது அல்லது உன்னுவிப்பது.

ஒரு பெண்ணுக்குக் கலியாணம் நடக்கப் போகிறது.  விரைந்தெழுந்து அவளைக் கொண்டு ஓடிவிடுதல். இதைச் செய்விக்கும் ஒரு மந்திரம் : சூனியம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 27 ஜூலை, 2024

தெவ்வோர் என்ற குறட் பதம்

 பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்து தெவ்வோர்

எழுபது  கோடி யுறும்


என்பது திருக்குறள்.  பழுது பண்ணும் மந்திரியை  அருகில் வைத்திருப்பதற்கு, எழுபது கோடி பகைவர்கள வைத்திருக்கலாம் என்கின்றார் தெய்வப் புலவர் நாயனார். பகைவர்கள் தொலைவில் இருப்பவர்கள். அவர்கள் படை எடுத்து வருவராயின் அதை அறிவதற்கு அரசு இயந்திரத்தில் பல உள்ளமைப்புகளும் ஒற்றர்களும் இருப்பார்கள். எளிதில் அறிந்துகொள்ளலாம். பல போர்களில் எதிரியும் ஆத்திரத்தைக் காட்டுவான்.  போர்ப் புறக்கடவுதல் செய்வான் ( பிரகடனம்). இத்தகைய வசதிகள் மந்திரி செய்யும் சூழ்ச்சிச் சூழலில் கிடைப்பதில்லை. இன்னும் விரித்து ஒரு கட்டுரையாகக் கூட எழுதலாம். எழுத எழுத ஆனந்தமே.

தெறுதல் எனின் அழித்தல் என்பதும் பொருள்.  போர் நடத்தி எதிரியின் ஒரு கட்டிடமும் இல்லாமல் அழித்துவிடுவதுதான் பண்டைத் தென்னிந்தியப் போர்களில் வழக்கம்.  சிங்கப்பூரை யப்பானியர் எடுத்துக்கொண்ட இரண்டாம் உலகப் போரில்கூட முதன்மைவாய்ந்த கட்டிடங்களின் தொடர்பில்  இப்படி நடந்துகொள்ளவில்லை. அறிவோம் இதிலிருந்து பல ஆயின் இவற்றினை இங்கு விரியோம்.

தெறுதல் என்பது பகைத்து அழித்தல்.

தெவ்வோர் என்றால் பகைவர் ஆதலின் இதிலிருந்துதான் தெவ்வோர்> தேவோர்>தேவர் : படைமறவர் என்று வந்திருக்குமோ என்று நீங்கள் ஓர் ஆய்வு செய்யலாம். அவ்வாறாயின் தேவர் என்பது படைஞர் என்றும் பொருள்தரும். செய்து ஆய்வில் ஈடுபடுக.

தெறுநர் என்ற சொல்லும் பகைவர் என்றே பொருள்தரும். இது தென்னர் என்று மாறிற்று. "றுந" என்பது "ன்ன" என்று திரிந்தது.

தெறுவோர் என்பது பகைப்பவர்கள் என்று பொருள்படும்.  தெறுகிறவர்கள். பகைப்பவர்கள்.

இது நாளடைவில் தெறுவோர்> தெ(வ்)வோர் என்று திரிந்துவிட்டது . இந்தச் சொல்தான் குறளில் வந்துள்ளது,

று வல்லெழுத்து.  கெடும்.

வகர ஒற்று இரட்டித்தது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

சுலோகம்

 சுலோகம் யாது அறிவோம்.

இதில் இருக்கும் பகவுகளாவன.  சொல்(லுதல்).  ஓ(ங்)கு(தல்), அம் விகுதி.

சொல்+ ஓகு+ அம் >  சொலோகம்> சுலோகம்..

இதில் சொல் > சு(ல்) ஆன திரிபு.

இரு சொற்களின் தொடர்பு இங்கு விளக்கப்பட்டது.

இங்கு ஓங்கு ( இடைக்குறைந்து  ஓகு என்று ) நிற்கிறது.   ஆகவே ஓசையும் பொருளும் சொல்லைக் காட்டிலும் சுலோகத்தில் உயர்ந்து நிற்கின்றது  என்பது பெறப்படும்.  இது ஏன் சுலோகம் என்ற சொல் படைக்கப்பெற்றது என்பதற்கும் சொல்லுக்கும் சுலோகத்திற்கும் உள்ள வேறுபாட்டினையும் விளங்கக் காட்டிற்று.  தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் உள்ள தொடர்பினையும் காட்டி,  அது இந்தோ ஐரோப்பியம் என்று பெயரிடப்பட்டது ஒரு புனைவு எனற்பாலதையும் விளங்கவைக்கிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.