சனி, 18 ஜனவரி, 2025

வட்டநிலவுக்கு விலகாத துன்பம்

 வட்டநிலா  தினம்தினமும்  வரும்போம் இன்ப

வண்ணமுகம் தவறாமல் நகையே கண்டேன்

விட்டபின்னே நாண்முழுதும் அமைதித் தென்றல்

விழவெனினும் உறங்கிடினும் துன்பொன் றில்லை. 


நீயெற்கு வானிலொரு நிலவே  ஆனாய்

நீவாழ்க என்றொருசிற்  செய்தி  தந்தேன்!

நாயொத்துப் பலருக்கும் அமர்வின்   நன்மை

நான் தந்தேன்  எனக்கொன்றோ வாழ்க்கை இல்லை!


நான்பல்லோர்க் காறுபடும்  நறிய பேறு

நனிதந்தும்  பயன் தீர்ந்த  மரமே  என்றாள்

தேனில்லை வாழ்விதிலே தெரிந்து கொள்வாய்

தேடிவந்து சேர்ந்தநலம்  திரட்டி வெல்வாய்.


வட்டநிலா என்றது  ஓர்அழகியை.  அவள் முகத்தைக் கண்டால் அன்று நலமாக இருக்கும்.  சிரித்த முகம்.   வானின் நிலவு போல.  ஆனால் பலருக்கும் முகம் காட்டி நலம் விளைவித்தாலும்,  அவளுக்கு வாழ்வில்லாத் துன்பம். பெற்றோர் இறந்தபின் யாருமில்லை.  அண்ணன் தம்பி யாரும் இல்லை. திரட்டிய செல்வதை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடும்.  வாழ்க்கை இப்படித்தான்.  எந்தத் திருடன் பயனடைவானோ என்ற நிலை.

நில வும்  அப்படித்தான். அழகு.  அருகில் சென்றால் கரடு முரடான மண் உருண்டை.

நீ எற்கு -  நீ எனக்கு,

நாண்முழுதும் - நாள் முழுதும்.  ண்  புணர்ச்சித் திரிபு.

பலருக்கு உதவும் நலம் -  அமர்வின் நன்மை =  அமர்வு இன் நன்மை

வரும்போம்  -  வரும் போகும்

நறிய -  சிறந்த

பேறு -  பாக்கியம்

பல்லோர் - பலர்

நனி = நல்ல

தேன் -  இன்பம்

தேடிவந்து சேர்ந்த நலம் -  நல்ல பெயர்.

திரட்டி வெல்லுதல்  கொடை தந்து அமைதல்.

எனக்கொன்றோ  -  எனக்கு ஒன்று.  ஓ என்பது அசை.

ஆறுபடும் -  நல்வழியில் செல்லும்


மகிழ்க.

மெய்ப்பு -பின்

வெள்ளி, 17 ஜனவரி, 2025

பண்சால் கல் உண்மை இயன் திரியங்கள் ( பஞ்சகன்மேந்திரியங்கள்)

 பிறப்பு ஐந்து அல்லது பிறப்பு அஞ்சு  என்பதிலிருந்து பஞ்சு பஞ்ச என்பவை ஐந்தைக் குறித்தன என்பதை முன்னர்க் கூறியிருந்தோம்.  பெரும்பாலும் வீடுகளின் முன் நின்று பாடி ஊதியம் பெற்றோர் நான்கு  ஐந்து பாடல்கள்தாம் பாடுவர்.  அப்புறம் ஏதாவது எதிர்பார்ப்பர். காசுகள், அரிசி, நெல், மற்ற தானியங்கள் போட்டால் பெற்றுக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய்ப் பாடுவர். பண்டைக் காலத்தில் பாடகர்கள் இவ்வண்ணமே இந்தியாவில் மட்டுமன்று, எங்கும் நடந்துகொண்டனர். திரைப்படம் நாடகம் என்றாலும் சிறப்பான நாட்களில் அல்லாமல் பிறவற்றில்  ஓர் எல்லையுட் படும்,

நான்கு ஐந்து என்பவை முன்னர்  எல்லைகளாக இவை போல்வனவில் இருந்தன.

பண்கள் பாடுவதிலும் ஐந்து என்ற எல்லையே சிறப்பாக வந்தது. பண்சார் அல்லது பண்சால் என்பதும் பஞ்சு என்று குன்றற் குரியது,

இவ்வாறு இயல்பாகத் திரிவன "இயன் திரியங்கள்" ஆயின என்பதை அறிக.

கல் உண்மை இயன் திரியங்களே பின் கன்மேந்திரியங்களாய் விட்டன. கல் உண் பின் கல்மேல்> கல்மேன்  என்று வருவது இயல்பினது ஆகும்.

இவை கல் அதிகப் புழக்கம் பெற்று இரும்புவரா முன்னே அமைந்த சொற்கள். கல் இரும்பு முதலியவை நம்மிடையே பிற்காலத்தில் வந்தனவா அல்லது முன்னே வந்துவிட்டனவா என்பன ஆராய்ச்சிக்குரியவை. யாம் சொற்களை மட்டுமே தருகிறோம்.. இயலும் திரியங்கள் இயல் > இயன் என்று லகரம் னகரமாகும்.

கல் கரு என்றாகும். இதை முன் எழுதியுள்ளோம்.  கருவி என்ற சொல் கல் என்பதனடியதாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

வியாழன், 16 ஜனவரி, 2025

பவுதிகம் என்ற சொல் அமை

 இன்று பௌதிகம் என்ற பழைய சொல்லைக் கண்டாய்வோம்.

புவியில் உள்ள பொருள்கள் உண்மையில் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் பரவிக் கிடக்கின்றன.  ஆகாயவெளி எனப்படும் வான்வெளியிலும் உள. இதற்கு விசும்பு என்றும் பெயர். தீயில் எரிந்து அழிந்தும் சாம்பலாகின்றன. இவ்வாறு பரவு பொருள் என்று உணரப்பட்டு,  அதற்கு  பரவுபொருள்    என்றே பெயரிடுதல் எளிதாய் இருக்கும் என்று எண்ணினாலும் எதையும் வெள்ளிடையாகச் சொன்னால் பெயர் மக்கள் மனத்தில் திறமான பெயராய் அமையாது எனக்கருதி,  பரவித் திகைவது  என்ற பொருளில் பரவு+ திகை+ அம் > பரவுதிகையம் என்ற சொல்லமைக்கு வந்து சேர்ந்தனர்.  திகைதல் என்ற இங்கு உரு, உள்ளடைவு, நிறம், மற்றும் தன்மை என்னும்  இன்ன பொருட்களால் ஒரு தோற்றம் அல்லது மேனி உடையதாதல்.  திகை அம் என்பது திகம் என்று மாற்றப்பட்டு,  பரவு என்பது இடைக்குறையாக்கப் பட்டு பவு என்று மாற்றப்பட்டது. இதுவே "பவு+ திகம்" என்று ஆயிற்று.

இப்போது ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது.  ஆர்க்கிமீடிஸ் அடைந்த மகிழ்ச்சியை இவர்களும் அடையலாம்.  யூரிக்க என்று கத்தி ஆரவாரிக்கலாம்,  ஏன் மகிழக்கூடாது,  பவுதிகம் என்ற சொல் எதோ இல்லாமல் வந்த சொல் போல மருட்டும்,

இதை இன்னும் மாற்றம் இழைத்து பௌதிகம் என்று சொல்லிவிட்டால் தமிழில் இல்லாத வேறு சொல் என்று அச்சுறுத்தவும் ஆகும்,

உங்களுக்குத் தெரிந்தவை இது சமஸ்கிருதம்.  அவர்களுக்கும் அமைந்த விதம் தெரியும்.

இடைக்குறை கடைக்குறை முதற்குறை என்பவற்றால்  மருட்டற்கு உள்ளான சொற்கள் பல. கழுமலர்,  அதாவது தண்ணீரால் கழுவப்படும் மலர் என்று ஆகி அது கமல என்று ஆகி கமலம் என்று அம் விகுதி பெற்று ஆட்சியில் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.

பரவு திகை அம்>  பரவுதிக அம் >     பவு திக அம் > பவுதிகம் : பௌதிகம்,

இயற்பியல் என்ற சொல்லை எப்படி அமைத்தனர்?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்