செவ்வாய், 30 ஏப்ரல், 2024

பரந்தாமன்

 பரந்தாமன் என்பது அழகிய தமிழ்ச்சொல்.

இது எவ்வாறு என்பதை இப்போது காண்போம்.

இன்னொரு மொழியில் இச்சொல் எப்படி அமைந்தது, என்ன பொருள் அதனின்று போதருகிறது என்ற இரண்டையும் கண்டபின் அதனின் மிக்கத் திறனுடைய பொருளை அதிலிருந்து கண்டு ஆன்ம நிறைவை அடைய வேண்டுமென்ற ஆவல் உமக்கு ஏற்படுமானல், அதன் எண்ணத்திலிருந்து நீங்குமுன்,  நீர் அதைத் தமிழால் பொருள் கண்டு பின் விலக வேண்டும். பற்பல ஆன்மிக நிலைகளில் தமிழ் உமக்குச் சிறந்த பொருளையும் ஆன்மிக நிறைநிலையையும் தரவல்லதாகும் என்பதை நீர் போகப்போக உணர்ந்துகொள்வீர்.

இவ்வாறு சொல்லிச்சென்றவர் அருளாளர்  அரவிந்த மகரிஷி  ஆவார்.  அவர் மாமுனிவர்.

பரந்தாமன் என்ற சொல்லில் பரம் + தாம் + அன்  என்ற சொற்கள் உள்ளன.

இதில் கண்ணன் தாமே பரம் என்கின்றான். பரம் என்றால் எங்கும் பரந்து நிறைந்துள்ள இறை.  -பேரான்மா ஆகிய நிறைவு.

ஆகவே தாமே பரம் ஆனவனே கண்ண பரமாத்துமன்  ஆவன்.

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் 

கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


கருத்துகள் இல்லை: