புதன், 11 செப்டம்பர், 2024

வைராக்கியம் என்னும் சொல்

 இதன் அடிச்சொல் வைத்தல் என்பதுதான்,

வை+ இறு + ஆக்கு+ இ + அம்

வைத்த இடத்தில் ( மனத்தில்)  ஓர் எண்ணம் இருகி ( இறுகி) (முன் வித்தியாசம் இல்லாமல் வழங்கியது) வெறோர் ஆக்கத்தை விளைவிக்குமானால் அதுவே வைராக்கியம்.  நீர் புரிந்துகொள்ளும் பொருட்டு இவ்வாறு வாக்கியப்படுத்தி உள்ளோம்.  இந்த வாக்கியத்தை மேலே குறித்த பகவுகளின் பொருளுடன் இணைத்துப் படித்து அறிந்துகொள்க. பின் உமக்கு வேண்டிய படி மாற்றி அமைத்துக்கொள்க.

படிப்பவர்க்கு உடனே பொருள் விளங்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறோம்.

இவ்வாறு தரவு செய்யவே இது தமிழ்ச்சொல் என்பது தெரியும்.

அறிக மகிழ்க.

 மெய்ப்பு பின்.






.----------------------------------------------------

வேறு சில குறிப்புகள்.  ஆசிரியர்க்கு.  நீங்கள் இதைத் தவிர்த்துவிடுக.

வை >  வயின். வை எனபது அடிச்சொல்லாக இருந்தால் அதிலிருந்து பிறக்கும் சொல் குறிலாகிவிடும்.  வை+ இன் >  வயின். இங்கு இன் என்பது விகுதி யானது.

வை+ அம் >  வையம்:   இது உலகம் என்று பொருள்படுவது. உலகம் என்பது கடவுளால், இயற்கையால் வைக்கப்பட்ட இடம் என்பது பொருள்.  வையகம் என்பது இதன் இன்னொரு வடிவம்.

வை+ கு+ அறை >  வைகறை:  சூரியன் அடிவானில் வைக்கப்பட்டது போல் பாதியும்  அறுத்து மீதமுள்ளதுபோல் வெளிப்பட்டுப்  பாதியும் தெரிய, விடியும் நிலை. 

அருணம் >  அறு+ உண் + அம் >  அறுணம்>   அருணம்,  இது வைகறை. சூரியன் அறுக்கப்பட்டதுபோல் பாதியும்  வெளிப்பாடு பாதியும் தெரிவது.  உண் என்பது   அறுதலுண்டது என்பதன் பொருட்டு. உள்> உண்.  அம் விகுதி.

உயரற்காலம் :  இது திரிந்து உயற்காலம் (  இடைக்குறை)  இது பின் திரிந்து உசற்காலம் ஆகி,  மெருகேறி உஷற்காலம் ஆயிற்று.

உதயம் :  உது + அ+ அம் : சூரியன் முன் அங்கு எழுந்தமைதல்.  உது = முன்.

றகரம் இன்னொரு சொல்லாக்கத்துக்குப் பயன்படுமாயின் ரகரமாக மாறும்



திங்கள், 9 செப்டம்பர், 2024

இந்திரியம் --சொல் புனையும் தந்திரங்கள்.

 இச்சொல் ஒன்றுபாட்டின்போது உடல்நிலை திரிந்து  வெளியேறும் திரவம்.

இச்சொல்லில் :

இன்  -  இது இன்பம் என்ற தமிழ்ச்சொல்லின் முன்பகவு.

திரி -  இது உடல்நிலையில் ஆண்மகற்கு உண்டாகும் மாற்றங்களைக் குறிக்கிறது.

அம்  -  விகுதி.  அமைதல் குறிக்கிறது.

இச்சொல் ஒரு புனைவு.  திரி என்று உள்ளிடாமல் தி என்று ஓரெழுத்துமட்டும் இட்டும் இது புனைவுபடுதல் உண்டு. அப்போது இது இந்தியம் என்று அமைதல் காண்க.

"கண்முதல் இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து

சயனா சனவானைப்  போலாகி  

கண்முதல் இந்தியத்துக்கும் பரனாய் சாதிக்கிற"

என்று மணிமேகலைக் காப்பியத்தில் வரும்,   இதைத் தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதையில் காண்க.

புனைவில் இந்திரியம் என்றே உண்டாகிப் பின் குறைப்பட்டிருப்பின்,  இடைக்குறை எனலாம். இன்பத்துக்கு இன் மட்டும் சொல்லுட் புகுந்திருப்பதால் திரிதல் என்பதற்கு தி மட்டும் இட்டுச் சொல்லாக்கி யிருக்கவும் கூடும்.  அவ்வாறாயின் இந்திரியம் என்பது இடைமிகை ஆகும்.

பரார்த்தம் என்றால் ஆன்மாவிற்குப் பயனாவது, சயன  ஆசனம் - படுத்தலும் அமர்ந்திருத்தலும்.  ஆசனவான் - ஆசனம்கொள்வான்.   பரனாய் -  பயன் கொள்வோனாய்.

கண்முதல் இந்தியம் என்றதால்  இது ஐம்பொறிகள் என்றும் உறுப்புகளைக் குறிக்கும் சொல். 

சொல்லாக்க உத்திகளை இச்சொல்லிலும் கண்டுகொள்ளலாம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

அகர எகரத் திரிபு.

 கல்லுதல் என்பது கெல்லுதல் என்றும் திரியும்,  ஆதலின் அகரத்துக்கு எகரமும் போலியாகும்.  ஆனால் இது கவனமுடன் விளக்குதற் குரியது.  திரிபுகள் பல. கதை என்பதும் கீதை என்பதும் எல்லாம் ஒலி என்ற அடிப்பொருளில் வருவனவே. பயன்பாட்டில் பொருள் நுட்பமாக வேறுபடலாம்.  கது என்ற அடிச்சொல்லி லிருந்து வரும் காது என்பது செவியைக்  குறிக்க,  கீதம் என்பது பாட்டைக் குறிக்க வழங்குவது காண்க.  ஆனால் காது ஓர் ஒலிபற்றி;  கீதம் ஒலி எனினும் இசை. அதாவது ஒலியெழுச்சி.

ஒலிபற்றி எனற்பாலது " ஒலிபற்றினி"   (a sound change receiver) என்ற புதுச்சொல்லால் குறிப்புறுதல் சிறப்பாம்.

காது:  உகரம் முன்வருதலை குறிக்கும் விகுதியாய் நுட்பமாக வழங்கியிருக்கலாம். இது பழஞ்சொல்.  கீதம் என்பதில்  கத் > க+   க் > ஈ (தருதல்)>கீ எனப் பின்னுதல் நிகழ்ந்திருக்கவேண்டும்.  இறுதி து மட்டும் பற்றிக்கொள்ளப்பட்டது.  கா து > கா/கீ (ஈ)  என பின்னது கொண்டு முன்னது கெடுத்தல்.  சொல்லின் பகுதியைத் திரித்தல் அயல்மொழிகட்கு வழக்கம்.  விகுதியை மட்டும் மாற்றாமல் பகுதியில் திரித்தல்.  கீதம் என்பதில் ஈதல் என்பதன் ஈ ஏறிற்று,  ஒலியினை  ஈதற் குறிப்பு.  ஈதல் என்பது வெகு நுட்பான முனைத்திரிபு ஆகும்.  ஆ+க்து > ஈ+க்த> க்+ ஈ/ து +அ. எனக்காண்க.

அகர வருக்கத்தவை,  குறில் நெடில் பேதமின்றி, ஒன்று மற்றொன்றாகத் திரிதக்கவை ஆனாலும்,  கவனத்துக்குரியவை.  எடுத்துக்காட்டு:  அதழ் - இதழ்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.