Pages

வெள்ளி, 17 மே, 2024

நாதன், நாமம் என்பவை

 இறைவனைச் சொற்றுணை வேதியன் என்பதால்,  அவன் நாமத்தின் இருப்பிடம் நம் நாவினால் செய்யும் ஒலியாகிய அவன் பெயரை ஒலிப்பதே  ஆகும்.  இவ்வாறு நாவொலி பெறுபவை  நாதன், நாமம், நமச்சிவாயம் என்பனதாம்.

பாடல்: திருநாவுக்கரசர்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன் 

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் 

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் 

நற்றுணை யாவது நமச்சி வாயவே.

(கல்+ தூண் > கற்றுண் என்று குறுகியது எதுகைநோக்கியது.)


சொல்லுக்குத் துணைவருவது நாவு. அதிலிருந்து  நா+இம்+ அம் > நாமம்.  இம் என்பதில் இகரம் கெட்டு மகர ஒற்று மட்டும் நிற்கும்.  அ, உ மற்றும் இ என்பவற்றிலிருந்து அம், இம் மற்றும் உம்.  இவை அன், இன், உன் என்றும் திரிந்து சொற்களில் இடைநிலைகளாக வரும்.    உன் ( உனது) என்ற முன்னிலைத் தொடர்பான உன்-ஐ இந்த இடைநிலையினின்று தனியாய்ப்  பிரித்து அறிந்துகொள்ளவேண்டும்.  அது குழப்பம் ஏற்பாடாமல் காத்தற்கு.

ஆதலின் நாமம், நாதன் என்பவை தமிழிலும் அவற்றின் பொருளைத் தருவனவாம்..

நா+ த் + அன் >  நாதன்.

இதை நா+ தன் எனினும் இழுக்கில்லை. இங்கு இது, து, த் என்பன சொல்லாக்க இடைநிலைகள்.  அதாவது சொல்லமைக்கும் உதவி ஒலிகள்.

நா+ ம் + அம்>  நாமம்.

ஆனால் நா+ மம் என்று விளக்குவதைத் தவிர்த்து,  நா+ ம் + அம் என்றே விளக்குக.

இது என்பதே த்  என்று குறுகி ஏற்பட்டது  எனினும் நா + இது + அன் என்று விரிக்கவேண்டியதுமில்லை. சில வடிவங்கள் திரிந்தபின் உள்ளபடி காட்டின் நலம். சில திரிதலின்முன் உள்ளவாறு காட்டினும் ஏற்புடையவாகும்.

எப்படி விளக்கினால் ஒவ்வொன்றையும் எளிதாக உணர்ந்துகொள்ளலாம் என்பதே குறிக்கோள்..  அன்+ அம் என்பதை அனம் என்று காட்டுவதுபோன்றதே இது  .  அனம் என்பது இங்கு இடைச்சொல்.  அனம் என்று ஒரு தனிச்சொல் ( பெயர்ச்சொல்) இல்லை.

மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_32.html   

நாதன் நாமம் முதலியவை

https://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_6.html

சில சோதிடச் சொற்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.