Pages

புதன், 3 மே, 2017

பாவம் என்ற சொல், தமிழ்ச்சொல்லே......

பாவம் என்ற சொல், தமிழ்ச்சொல்லே ஆகும். தமிழர்களும் பாவபுண்ணியம் பார்த்தவர்கள்தாம்.  எந்தக் காலக்கட்டத்திலும் எல்லோரும் நாத்திகர்கள் அல்லர்; சிலர் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்திருப்பது சாத்தியமே.

வினைச்சொல் பாவுதல் என்பதே. பாவுதல் என்பதன் பொருளாவன:

1 தாண்டுதல்
2 நடுதல்
3 பரப்புதல்
4 பரம்புதல்
5 பற்றுதல்
6 --
7 வேர் வைத்தல்
8 விரித்தல்
9 பரவுதல்
10 வியாபித்தல்
11 படர்தல்
12 விதைத்தல்
13 தளவரிசை இடுதல்.

விதைப்பதுபோலும் உள்ளிடப்பட்டுப் பாவம் பற்றிக்கொள்கிறது. ஒருவன் துணிந்து ஒரு பாவத்தைச் செய்தபின், தன் உணர்வுகளை
நிலை நிறுத்த முடியாதவன், பின்பற்றிப் பாவச்செயலில் ஈடுபட்டு
விடுகிறான். நல்லவை இப்படி இவ்வளவு  வேகமாகவும் தீவிரமாகவும்
பரவுவதில்ல. திருடுவதில் பொருள்வரவு இருக்கிறது. ஆகவே அது
வேகமாகப் பரவும். யாரும் பார்க்காமல் இருப்பதும் ஒரு காரணம்.
காவல்துறை அறியாததும் ஒரு காரணம். இன்னும் பல. பொருளை
இழந்தவன் மிரட்டினால் பணிந்துவிடுகிறான்....  ஆனால் பொருளை
அறத்திற்கு உதவு என்று  சொல்லிப்பாருங்கள்.  " கரவு உள்ள, உள்ளம் உருகும்" என்றார் ஆசிரியர் திருவள்ளுவனார். கொடுக்க‌ முன்வருவார் ஒருசிலர். எடுப்பாரே அதிகம்.



பாவம் விதைக்கப் படுகிறது ; பற்றுகிறது;  உள்பற்றி ( இதுதான் உத்பற்றி ) விரிகிறது. பாவிகள் மிகுதியாவர்; நல்லோர் குறைவர்.

பாவம் என்றவுடன், கடவுளைத் தொடர்பு படுத்தவேண்டாம். அவர்
கேட்டாலும் கேட்காவிட்டாலும், இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பாவம் பாவமே. நீதியரசர் இருந்தால்தான் குற்றம் என்பது தவறு.
குற்றம் முதலில் மெய்ப்பிக்கப்படும் நிறைவு நிலையை அடைகிறது.
பின்னர்தான் காவல்துறையும் நீதிபதியும் வருகின்றனர்.    நோய் இருந்தால் மருத்துவர் வரவேண்டும் என்பதில்லை; அவரிடம் போகுமுன்பே  இறந்தோர் பலர்.  பாவம் செய்தால் செய்து முடித்துச்
செய்தவன் உள்ளழிந்துபோகிறான்.  அவன்  ஆன்மா அழிவு நிலையை
எய்துகிறது. உங்கள் ஆன்மா அழிவுற, கடவுளுக்கு என்ன தொடர்பு?
தெயவ மேடைக்குச் செல்ல, தகுதி இழந்துவிடுகிறீர். எல்லாம் உங்களுக்கு நடக்கிறது; கடவுள் எப்போதும்போல் இருப்பவர். நீதியரசர்போல் பின்வந்து கேட்கிறார். பாவமானது உடலையும் ஆன்மாவையும் குமுகத்தையும் நாட்டையும் அழித்தபின்,  அடுத்தது என்பது அடுத்தது; நேரடித் தொடர்பு இல்லாதது.

இப்படி எழுதினால் சொல்லாராச்சியாக இருக்காது ஆகையால்
இனி,   பாவம் தமிழ் என்பதை விளக்குவோம்.

விதைக்கப்பட்டு, உள்பற்றி விரிவது பாவம்.

பாவுதல் தமிழ். அது பிற மொழிகளால் ஏற்கப்பட்டது தமிழின்
பெருமையாகும்.

முன்னரே உணர்வுகள் களத்தில் ஓர் இடுகையில் கூறியிருந்தேன்.
இது ஒருவகையில் மறுபதிவு ஆகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.