Pages

வியாழன், 12 மே, 2016

இதிகாசம்

இதிகாசம் என்பது நாம் வழங்கும் சொல். இதற்குப் பிறர் எப்படிப் பொருள் கூறினாலும்.  நாம் ஆய்வு செய்யலாம்.

இது +  இகு  + ஆய் +  அம்.

இவற்றுள் கடைசி இரண்டு துண்டுகளையும்  புணர்த்தினால் ஆயம் என்று வரும. யகரம் சகரமாகத் திரியத்தக்கது ஆதலின்  இது ஆசம் என்று முடியும். ஆகவே இந்த இறுதி நிலையின் பொருளாவது: ஆயப்படுவது அல்லது ஆய்வு என்பதாகும்.


இகு என்பது தன்வினையாகவும் பிறவினையாகவும் வரும், இவற்றுள் இகுத்தல் என்பது பல பொருளது ஆகும். அழைத்தல், ஈதல் இசை வாசித்தல் என்பனவும் இவற்றுள் அடங்குவன.

ஆகவே கதைகளைத் தந்து வாசித்தல் அல்லது ஆய்தல் என்று
பொருள்படுவது இகுத்தலென்பது.

இது இகு ஆசம் என்பது இதிகாசம் என்று கோவைப் பட்டு  நிற்கும்.

இனி இகு என்பது இங்கு என்பதன் இடைக்குறை வடிவமும் ஆம்.

வெறுமனே  இது இங்கு ஆயப்படுகின்றது என்றும் பொருள்.

தமிழில் சொல்லை அமைத்தபின் வேறுவழிகளில் பொருள் கூறுதல்
ஒரு மொழி நாகரிகம் ஆனபடியால் பிற பொருள்களும் கூறுவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.