Pages

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பிற மதங்களும் சிவஞானமும்

முன் இடுகையிலிருந்து  தொடர்வோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_11.html


இதனைச் சிறிது ஒப்பாய்வு செய்வோம்.


இஸ்லாமிய மார்க்கத்திலும் கிறித்துவ சமயத்திலும்கூட,   ஆன்மா இருப்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது,   ஆனால் இந்து மதத்துக்கும் அவைகட்கும் ஒரு வேறுபாடு உண்டு,     அவற்றின் கூற்றுப்படி  ஒருவன் பிறக்குமுன் அவன்தன்  ஆன்மா இருக்கவில்லை.  அவன் பிறக்கும்போதுதான் அவன் ஆன்மாவும் உண்டாகி அவனுள் இருக்கத் தொடங்குகிறது.முன்பிறவி  இல்லையாகையால், முன் அவன் ஆன்மாவும் இல்லை.


அவன் இறக்கும்போது, அது அவனைவிட்டுப் போய்விடுகிறது. எங்கு போயிற்று என்பது தெரியவிட்டாலும்,  இறைவனிடம் சென்றுவிட்டது என்பர் அம் மதத்தினர்.


இந்து மதத்தில் நம் ஆன்மா முன்னும் இருந்தது. பின் இந்த உடலை எடுத்தோம். இதைப் பிறவி என்றும்  சென்மம்  (ஜென்மா)   என்று,ம் கூறுவர்.  இந்த உடலை விட்டுச் சென்றுவிட்டபின்னும் இருப்போம்.  ஆன்மா என்றும் இருப்பது.  கடவுளும் என்றும் இருப்பவர்.    இதில் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ளதோர் ஒற்றுமை.தெளிவுபடுகிறது .


கடவுள் என்பவர் பெரிய ஆத்மா.  நாமோ சிறிய துண்டு ஆதாமாக்கள். எப்படித்  துண்டுகள் ஆனோம்?  அதை வேறொரு சமயத்தில் சொல்வோம்


We shall also look at the Christian concept of purgatory  later. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.