Pages

சனி, 12 டிசம்பர், 2015

புத்திரி etc

மகள் என்பது குறிக்கும் புத்திரி,  மற்றும்  ஆண்பால் புத்திரன்,  பலர்பால் புத்திரர்  முதலியன  தமிழில் வழங்கும், இவற்றைத் தமிழாக ஏற்றுக்கொள்ளவில்லை   தமிழ்ப்புலவர்.

இவற்றின் அடிச்சொல்லைக் கண்டு பிடிப்போம்.

புதல்வன் என்பதன் அடியை முன் இடுகையில் ஒரு பத்தியில் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_63.html

இதுவும் அதே புது என்னும் அடியினின்று வருவதே.

புத்திரி புதியவளாக  வந்து இருப்பவள்.  அதாவது   குடும்பத்தில்   பிறந்து  புதிய உறுப்பினளாய்  இவ்வுலகில்  வந்தவள்-.   தாய்  தந்தையர்  முன்னரே தோன்றிப்   பழமை எய்திவிட்டவர்கள். முதலில்  பிறந்த குழந்தையைக்  குறித்துப்  பின் வளர்ச்சி பெற்றுப்  பெரியவர்கள் ஆனோரையும் குறித்தது இச்சொல்.  

புது + இரு + இ =  புத்திரி.  ( தகரம் இரட்டித்தது. )
புது + இரு + அன் =  புத்திரன் .
புது + இரு+ அர்  = புத்திரர்.  

இரு என்ற சொல்லை இடையில் செருகி அமைந்த இன்னொரு சொல்:

நம் + புது+  இரி =  நம்பூதிரி.

இதில் பூதிரி  என வந்தது  முதலெழுத்து நீண்டதனால். 

முதனிலை திரிதல் தொழிற்பெயரிலும் பிற பெயரிலும் வரும்,,

புத்திரி  என்ற சொல் மலாய் மொழியிலும் உள்ளது.  அங்கு அதற்கு "இளவரசி " என்று பொருள்.  பல மொழிகளிலும் புகுந்துள்ள இந்தப் புத்திரச் சொல்லை அமைத்து வழங்கிய  பெருமை தமிழினது ஆகும் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.