Pages

செவ்வாய், 14 ஜூலை, 2015

MAS எண்ணாயிரவர் இழப்பர் வேலையை

எண்ணா  யிரவர்  இழப்பர் வேலையை
இரக்கத்திற்   குரியர் இவர்கள் அல்லரோ?
பன்னாட்   டுக்கும் பறந்து திரும்பிய
பணிசிற மலேசிய வானூர்  திகளே
இன்னா  ளிலும்இனி எந்நா  ளிலுமே
இயங்கும் பாதைகள் வறங்கூர் வளத்தினால்
குறைந்திடும்; அளவில் தொலைவில் என்றனர்.
இழப்பீடு என்பதே இருந்த போதிலும்
குழம்பி நிற்பவர் உழைப்பை இழந்தவர்!
ஊதியம் இன்றி  யாதுதான் செய்வர்.
மீண்டும் மலர்க   வாழ்வு!
தீண்டிய  துன்பம் யாண்டும் விலகவே.

http://says.com/my/news/more-than-8-000-people-will-be-losing-their-jobs-in-upcoming-mas-lay-off


புதுக் கவிதையாய் எழுத முற்பட்டு  ஆசிரியம்போல் ஆகிவிட்டது....படித்துக் கண்ணீரில்  பங்குகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.