Pages

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

படனை > பஜனை

 இந்தச் சொல் பழங்காலத்தில்  படனம் என்று  இருந்தது.  பின்னர் இது படன அல்லது பஜன  ஆகிப் பஜனை என்று  எழுதப்பட்டு இன்றும் இவ்வாறே வழங்கி வருகிறது.

சாவு என்ற சொல்லுடன் தொடர்புடைய சவம் என்ற சொல் பிணத்தைக் குறிப்பது.

சா> சா+ அம் >  சவம் என்று  குறுகி விகுதி பெற்றுத் தொழிற்பெயராவது காண்க.

தாள் என்ற சொல்லிலிருந்து வருகிற சொல் அம் விகுதி பெற்றுத் தளம் என்று குறுகி  அமைகிறது.    வா என்ற சொல்லினின்று  வந்தான் வருகிறான் என்ற சொற்களும்  வகரமாகக் குறுகிவிட்டன.  இது தமிழ்மொழியில் இயல்பு  ஆகும்.

இதுபோலவே படனம் என்ற சொல்லும்.  பாடு+ அன்+ அம் >  பாடனம்> படனம் என்று குறுகும்.

படனம் > பஜன > பஜனை.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.