வட்டநிலா தினம்தினமும் வரும்போம் இன்ப
வண்ணமுகம் தவறாமல் நகையே கண்டேன்
விட்டபின்னே நாண்முழுதும் அமைதித் தென்றல்
விழவெனினும் உறங்கிடினும் துன்பொன் றில்லை.
நீயெற்கு வானிலொரு நிலவே ஆனாய்
நீவாழ்க என்றொருசிற் செய்தி தந்தேன்!
நாயொத்துப் பலருக்கும் அமர்வின் நன்மை
நான் தந்தேன் எனக்கொன்றோ வாழ்க்கை இல்லை!
நான்பல்லோர்க் காறுபடும் நறிய பேறு
நனிதந்தும் பயன் தீர்ந்த மரமே என்றாள்
தேனில்லை வாழ்விதிலே தெரிந்து கொள்வாய்
தேடிவந்து சேர்ந்தநலம் திரட்டி வெல்வாய்.
வட்டநிலா என்றது ஓர்அழகியை. அவள் முகத்தைக் கண்டால் அன்று நலமாக இருக்கும். சிரித்த முகம். வானின் நிலவு போல. ஆனால் பலருக்கும் முகம் காட்டி நலம் விளைவித்தாலும், அவளுக்கு வாழ்வில்லாத் துன்பம். பெற்றோர் இறந்தபின் யாருமில்லை. அண்ணன் தம்பி யாரும் இல்லை. திரட்டிய செல்வதை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடும். வாழ்க்கை இப்படித்தான். எந்தத் திருடன் பயனடைவானோ என்ற நிலை.
நில வும் அப்படித்தான். அழகு. அருகில் சென்றால் கரடு முரடான மண் உருண்டை.
நீ எற்கு - நீ எனக்கு,
நாண்முழுதும் - நாள் முழுதும். ண் புணர்ச்சித் திரிபு.
பலருக்கு உதவும் நலம் - அமர்வின் நன்மை = அமர்வு இன் நன்மை
வரும்போம் - வரும் போகும்
நறிய - சிறந்த
பேறு - பாக்கியம்
பல்லோர் - பலர்
நனி = நல்ல
தேன் - இன்பம்
தேடிவந்து சேர்ந்த நலம் - நல்ல பெயர்.
திரட்டி வெல்லுதல் கொடை தந்து அமைதல்.
எனக்கொன்றோ - எனக்கு ஒன்று. ஓ என்பது அசை.
ஆறுபடும் - நல்வழியில் செல்லும்
மகிழ்க.
மெய்ப்பு -பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.