Pages

ஞாயிறு, 26 மே, 2024

திட்டுதலும் தீட்டும். ஜெபித்தல்.

 ஜெபித்தல் என்பது  சற்றே வேறுபட்ட தொழுகைமுறையைக் காட்டும் சொல்லாக இப்போது அறிகிறோம்.  

பழங்காலத்தில் ஒரு நாள் மூன்று வேளை மாதிரியான தொழுகை முறை மனிதன் அறிந்திருக்கவில்லை.  யாரேனும் தனக்கு ஒரு மறக்கவியலாத கெடுதலைச் செய்துவிட்டால் அவன் ஒழியவேண்டும் என்று அவன் பெயரைச் சொல்லித் திட்டுவதையே அவன் அறிந்திருந்தான். அதையும் பின்னர் அவன் சிலதடவைகள் நினைவுகூர்ந்தாலும், திட்டித் தீர்த்தது ஒரே முறைதான்.

ஒருவனைத் திட்டிவிட்டால். தன்னைப் பொருத்தினவரை அந்தக் கெடுசெயலோன் செத்துவிட்டவனுக்கு ஒப்பானவன் என்றே அவன் பாவித்தான். இதிலிருந்தே தீட்டு என்ற சொல்லும் தோன்றியது:

திட்டும்போது அவன் ஒழிக, அவன் சாகட்டும் என்பதே அவன் கழறியது ஆகும்.

திட்டுதல் வினைச்சொல்.

திட்டு>  தீட்டு.

இது முதனிலை திரிந்து நீண்ட தொழிற்பெயர். ( வினையில் தோன்றிய பெயர்ச்சொல்).  இங்குத் தொழில் என்பது வினைச்சொல் என்று பொருள்படுவது.

வினைச்சொல்: திட்டுதல்

திட்டு > தீட்டு.

ஒருவனைத் திட்டிச் சாவித்துவிட்டால்  ( சாக என்று ஒழிமொழி பேசிவிட்டால்) அவன் இறந்தவனுக்குச் சமனானவனே. மீண்டும் அவனிடம் செல்லலாகாது. இதுதான் தீட்டு.

இந்தத் தீட்டு பின்னர் வேறு வகையான விலக்கிவைப்புகளுக்கும் பரவிற்று.

இதை இவ்வாறு விளக்கினாலும்,  தீயிட்டுக்கருக்கு,  கரிச்சுக்கொட்டு என்னும் வழக்குகளால் முன் காலத்தில் தீயிட்டு என்ற வினை எச்சத்திலிருந்தே குறுகி தீட்டு என்ற சொல் உருவாகி வழங்கிப் பின் அதிலிருந்து வினை -  திட்டு, திட்டுதல் என்று வந்துள்ளது.

தீயிட்டு  > தீ(யி)ட்டு > தீட்டு.

தீட்டு > திட்டு > திட்டுதல்.

எச்சங்கள் முற்றுக்களாக வழங்குதல்: இன்றுவரை இவ்வாறு தென்மொழிகளில் வழங்கி வருதல் கண்கூடு. ஆகவே எச்சம் முற்று என்ற வேறுபாடு மேலோங்கும் தடைக்கருத்தாகிவிடாது.  இது ஓரெழுத்துக் குறைதான். பேச்சில் சுருங்கல் எளிது.

செபித்தல் என்பதும் சாவித்தல் > சவித்தல் என்பவற்றிலிருந்து வந்தனவென்பதும் பின் விளக்குறும்.

தெருள்> தெருட்டு>தெருட்டம்> தெட்டம்> திட்டம் என்றுமாகும்  ஆதலின் இஃது பல்பிறப்பிச் சொல்.

தெருள்> தெள்> தெள்ளு ( தெள்ளுதமிழ்)

தெள்+து+ அம் > தெட்டம்.  காணாமற் போனாலும் அவற்றைப் பிடித்துக் கொண்டுவந்து விடலாம்,  ஆய்வினால்.

அதனால்தான் இது பல்பிறப்பி. இன்னும் பல சொல்லவில்லை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.