Pages

சனி, 27 ஜனவரி, 2024

வராதவர்

 அழைத்து வந்தவர் அருகில் இருக்கவும்

பிழைத்த தன்மையால்  வாரா   தார்தமை

நுழைத்து     நுழைத்துப் பேசிடப் புகுதலோ

தழைத்தல் உற்றுற வாக்கிடக் கூடுமோ



அழைத்த பத்துப் பேரில் ஒன்பதின்மர் வந்துவிட்டனர். ஒருவர் வரவில்லை. வராதாவருக்குப் பல காரணஙகள் இருக்கலாம் . அவர்   வராமையை ப்   பொ து முறையில் பேசி ஆய்வு செய்யக் கூடாது.  அது ஒன்பது பேருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். பின்னர் தனிப்பட்ட முறையில் அறிந்து மகிழ்க


அழைத்து - அழைப்பிதழ் கொடுத்துக் கூப்பிட்டு, 

வந்தவர் அருகில் இருக்கவும் - அதை ஏற்றுக்கொண்டு    வந்து   அவர்கள் அமர்ந்திருக்கையில்,

பிழைத்த தன்மையால்  வாரா   தார்தமை - பிசகு ஏறியதன் காரணியினால். அழைப்புக்கு வராதவர் எவரையும்,

நுழைத்து     நுழைத்துப் பேசிடப் புகுதலோ--- மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையில் இந்த வராமை நிகழ்வினைப் புகுத்திப் புகுத்தி  உரையாடத் தொடங்குவதானது,

தழைத்தல் உற்றுற வாக்கிடக் கூடுமோ----  வராதவர் மன இணக்கம் முறிந்ததால் வரவில்லை என்றால் இப்படிக் கேட்பதால்  மீண்டும் உறவு தழைத்து எழுந்துவிடுமோ  என்றவாறு. அது காரணம் என்றாலும் அதுவன்று காரணம் என்றாலும் இப்படிக் கேட்பதனால் நிலைமை சீர்பட்டுவிடாது என்பது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.