Pages

சனி, 17 டிசம்பர், 2022

மரம், மரத்துப்போவது, மரி, மடி, மரணம், இன்னும் தொடர்பின ( பதிவுவரும்)

 


ஒரு காலத்தில் மக்கள்  மரங்கட்கு மனிதனைப் போல் "புலன்கள்" இல்லை என்று நினைத்தனர்.ஆனால் அன்றிருந்த தமிழர்களில் சிந்தனைத் தெளிவு ( தொல்காப்பினாரைப் போல் )  உள்ளோர் எல்லாப் புலன்களும் இல்லாவிட்டாலும் ஒரு புலன், இரண்டு புலன் என்று சில புலன் களாவது சிலவற்றுக்கு இருந்தன என்பதை உணர்ந்துகொண்டு, ஓரறிவு  , ஈரறிவு என்றெல்லாம் வகைப்படுத்தினர்.

உயிரோடு இருந்த ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவன் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறுகிறோம்.  இறப்பு என்பது "கடைசி" நிலையை அம்மனிதன் அடைந்துவிட்டான்"  என்பதுதான்.  இறுதல் என்றால் இறுதிநிலை என்பதே ஆகும்.

இறுதல் -வினைச்சொல்.  பொருள்:  முடிதல்.

இறு என்ற வினையிலிருந்து  " இற "  என்ற சொல் தோன்றியது. 

இறு - இறுதல்.

இற  ( இறு + அ )  > இறத்தல்.    இங்கு,  "அ"   என்பது ஒரு சுட்டடி எழுத்து அல்லது  சொல்'.  " அ " 

இதுபோலும்,  இன்னொன்று கூற வேண்டுமானால்,   கட என்பதைக் கூறலாம்.  எதையும் கடந்து செல்ல, முயற்சி  தேவைப்படும்.  முயற்சி என்பது ஒரு கடினச் செயல் ஆகும்.   இஃது  கடு > கட   ( கடு>  கடு+ அ > கட).  இங்கு கடு என்பது கடினநிலையைக் குறித்தது. ஓர் ஆற்றையோ மலையையோ கடந்து  செல்ல, மிக்க முயற்சி தேவைப்படும்.

ஒரு வீட்டில் மகனாய் வளர்ந்தவன் இன்னொரு வீட்டில் மணவினைக்குப்  பின் செல்கிறான் என்றால்,  அந்தப் "புக்ககத்தை" மருவுகிறான்.  ஆகவே மருமகன் ஆகிறான். ஆகவே  மன்பதைச் சூழலில் அவன் ஓர் மாறுதலை  ஏற்றுக்கொள்கிறான்.

பழங்காலத்தில்,   மரு என்ற சொல்லும்  மறு என்ற சொல்லும்  பொருண்மையால் அணிமையில்தான் இருந்தன.  ( பொருள் தொலைவு இல்லை).  ரகர றகர வேறுபாடுகள் இன்றிப் பழங்க்காலத்தில் வழங்கிய சொற்கள் பலவிருந்தன.  இவற்றைக் கூறும் இலக்கண நூல்களும் இருந்தன.

கடு என்பது கட என்றானது போலவே,  மரு என்ற அடிச்சொல்லும் மர என்று மாறியது.

புலனுணர்வு மாறிய நிலையில்,  " மரத்தல் " என்ற சொல் புலன் மாற்றமடைந்த நிலையை உணர்த்தியது.  :  கால் மரத்துப் போயிற்று,   கை மரத்துப் போயிற்று என்று அறிவித்தனர். வேறு புலன் நிலை,  அல்லது புலன் மாற்ற நிலை என்று பொருள்பட்டது.   ஆகவே  மரு,    மரு என்பதன் பொருள்தொடர்பினை அறிக.

மரம் என்ற சொல்லின் பொருள் இப்போது தெளிவு  ஆகிவிடும்.  மரு+ அம் > மரம் என்பது உணர்வற்ற நிலையில் உள்ள பொருள் என்பதே ஆகும்.

(  உயிர்கள் பல  தம் ஐம்புலன்களும் ஒரே சமயத்தில் இயங்கும் நிலையில் உள்ளன.   ஆனால் நிலைத்திணை உயிரிகள் பல இந்த நிலையினின்று மாறிச் சில புலன்களே இயங்குதற் குரியனவாய் உள்ளன. எடுத்துக்காட்டாக, தொட்டாற்சிணுக்கி என்பது. தன் ஊற்றுணர்வு மட்டும் இயங்குவதான நிலையில் உள்ளது. ஜகதீச சந்திரபோஸ்  போன்ற அறிவியலார் தங்கள் ஆய்வின் மூலம்,  செடிகள் இசையையும் அறிந்துகொள்ளும் தன்மை உடையன என்று காட்டினார்.  பாம்பு முதலியவை,  கண்ணும் செவியும் ஒன்றாக இருப்பதனைக் காட்டுகின்றன. நாய்கள் மிகுந்த மோப்ப உணர்வினை வெளிப்படுத்துகின்றன. அதன்மூலமே தம் இயமானனை அறிந்துகொள்கின்றன. ஆகையால், இவற்றின் 'மருவுநிலை' ஆய்ந்து காணத்தக்கவை. மனிதன் நீங்கிய மற்றவெல்லாமும் ஒருநிலைப்பட்டன என்று சொல்வதற்கில்லை.

நில செடிகொடிகள் வெட்டுப்பட்டாலும் ஒட்டிவளர்கின்றன.  ஒடித்து நட்டாலும் வளர்ந்துவிடுகின்றன. வாழைமரம் வாழையடி வாழையாய் வாழ்கிறது  மனித உடல் வெட்டுப்பட, பிழைக்காமல் இறந்தொழிகிறது.

மரு >  மரி   ( மர்+இ )  அல்லது மரு+ இ..

மரி >  மரி+ அண் + அம்  >  மரணம். ( மருவிய அண்மை நிலை )

மரி + அகம் >  ,மாரகம்  (முதனிலை நீண்டு விகுதி பெறல்)

மரணி > மரணித்தல் ,   மரி > மரித்தல்.

இவை எல்லாம் மருவுதல் என்னும் அடிப்படைக் கருத்துடைய சொற்கள்.


மடி >  மரி  ( போலி)

இல் > இறு திரிபு அறிக.

ஒப்பீடு:  நல் > நறு என்பதும் அறிக.



மேலும் அறிய:   

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_13.html


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்


17122022 :பதிவேற்றம் செய்யப்படும் .... மீண்டும் வருக

இடுகை: முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.