நம் வேலன் போர்முடித்து வாகை சூடியவன். அந்நிலையில் அவன் மிகுந்த வலிமையை வெளிப்படுத்தியவன். முள் என்றாலும் வேல் என்றாலும் உடற்பகுதியில் பதிந்த நிலையில் தம் வீரமிக்க அடியார்களை ஏற்று மகிழ்பவன். வீரத்தை விளையாட்டாகக் கொண்ட வேலன் வேறு எதைத்தான் விரும்புவான்?
குமரன் ஏந்திய வேல் வலிமையில் சிறந்த வேல். குமரனின் வலிமை அவன் ஏந்தி நிற்கும் வேலில் ஏற்றிக் கூறப்படும். அவன்முன் சூரபத்துமனும் இரு கூறுபட்டு ஒழிந்தான், முருகப்பிரானின் வேல்வலிமையால்.
அவன் வேலை வஜ்ஜிரவேலென்`கின்றோம்.
வஜ்ஜிரவேல் எப்படி அமைந்த சொல்?
வல் = வலிமை.
சிற = சிறந்த.
வல்சிற வேல் > வற்சிறவேல் > வஜ்ஜிர வேல்.
ஒரு தமிழ்ப்புலவர் வஜ்ஜிரவேலென்பதை வச்சிரவேலென்றெழுதினார்.
வடவெழுத்து எனப்படும் வட ஒலிக்குரிய எழுத்துக்களை நீக்கியது தொல்காப்பியம் வகுத்த வழிதான்.
ஆனால் அதை வல் சிற வேல் என்றறிவது நுண்மாண் நுழைபுலமன்றோ?
குமரன் ஏந்திய வேல் வலிமையில் சிறந்த வேல். குமரனின் வலிமை அவன் ஏந்தி நிற்கும் வேலில் ஏற்றிக் கூறப்படும். அவன்முன் சூரபத்துமனும் இரு கூறுபட்டு ஒழிந்தான், முருகப்பிரானின் வேல்வலிமையால்.
அவன் வேலை வஜ்ஜிரவேலென்`கின்றோம்.
வஜ்ஜிரவேல் எப்படி அமைந்த சொல்?
வல் = வலிமை.
சிற = சிறந்த.
வல்சிற வேல் > வற்சிறவேல் > வஜ்ஜிர வேல்.
ஒரு தமிழ்ப்புலவர் வஜ்ஜிரவேலென்பதை வச்சிரவேலென்றெழுதினார்.
வடவெழுத்து எனப்படும் வட ஒலிக்குரிய எழுத்துக்களை நீக்கியது தொல்காப்பியம் வகுத்த வழிதான்.
ஆனால் அதை வல் சிற வேல் என்றறிவது நுண்மாண் நுழைபுலமன்றோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.