Pages

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தலைவர் சொல்லைத் தட்டலாம் - நன்மையானால்

ஒரு பெரிய சமயத் தலைவர் இருந்தார்.  இவரைப்
பின்பற்றிச் சென்றுசொண்டிருந்த சீடர்கள் அல்லது
அடியார்கள் பலர் கூடவே இருந்தனர்.  தமக்கு உடம்பு
அவ்வளவு சிறந்த நிலையில் இல்லை என்று
கவலையுடன் இருந்த இவர்,  தாம் இறந்தபின்
தம்மை எப்படி அனுப்பிவைப்பது என்பதைப் பற்றிச்
சீடர்களுக்குச் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இவர்தம் அடியார்கள் அவற்றை மிகக் கவனமுடன்
உள்வாங்கிக் கொண்டனர்.

இவருக்கு முன்னிருந்து மறைந்த தலைவர்களின்
சடலங்களெல்லாம் நன்`கு  பாடம் செய்யப்பட்டு,
கெட்டுப் போகாமல் வைக்கப்பட் டிருந்தன , ஆதலால்
இவர் அருகிலிருந்த அடியார்கள்: " கவலை வேண்டாம்,
உங்கள் உடலையும் அப்படியே பாடம் பண்ணி
வைத்துவிடுகிறோம்" என்றனர். இவருக்கோ
மனநிறைவு ஏற்படவில்லை. "அழிய வேண்டிய
உடலை எதற்குப் பாடம் செய்து வைத்துக்கொண்டு
இருக்கவேண்டும்,  மேலும்  பாடம் பண்ணுகிற
வர்கள் பல உள்ளுறுப்புகளையும் அகற்றிவிடு
வார்கள்;  அவர்கள் கைகளும் என் உடல்மீது
புரண்டு என் உடலை மாசுபடுத்திவிடும்" என்று
கூறிவிட்டு,  "வேண்டாம், வெறும் வாசனை
முதலியவற்றைத் தெளித்து நேரம் வந்ததும்
புதைத்துவிடுங்கள்"  என்று சொல்லிவிட்டார்.

சிறிது காலம் சென்றபின் இவர் மறைந்துவிட்டார்.
இவருடைய அடியார்கள் இவர் சொன்னதை
மீறமுடியாமல் உடலைப் பாதுகாக்கும் பாடம்
பண்ணுதலை விடுத்து  நல்ல மணப்பொருள்களைத்
தெளித்துப் புதைப்பதற்குத் தயார்ப்படுத்தினர்.

பலருக்கும் அருள் வழங்கிய வள்ளல் ஆதலால்
இவர் உடல் கெட்டுப்போகாது என்று எதிர்பார்த்தனர்
அடியார்கள்.  இவரைப் புதைப்பதற்கு ஒரு வாரம்
ஆகிவிட்டது. அந்த நாட்டு அரசர் மற்றும்
அதிகாரிகள் உட்படப் பலர் வந்து குழுமினர்.
இவர் கிடத்திவைக்கப்பட்டிருந்தார்.  அவர்கள்
நோக்கும்போது உடல் சிறிது அழுகிவருவது
போல் அவர்களுக்குத் தோன்றியது. இவர்தம்
உடலும் ஊதிப்பெருத்துவிட்டது. சீக்கிரம்
எடுக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன்படியே இவர் சடலம் புதைக்கப்பட்டு
இடம் தூய்மைப்படுத்தப்பட்டது.

தம் தலைவர் ஒரு விதத் தலைத்  தடுமாற்றத்தில்
சொல்லியதை அப்பால் வைத்துவிட்டு சரியானது
எது என்று எண்ணிச் செய்யாமையால் அங்கு
குழப்பம் நேர்ந்துவிட்டது.  யார் எதைச் சொல்லிச்
சென்றிருந்தாலும்  அது ஒத்துவராது என்று
தெரிந்துவிட்டால் அதைத் திருந்தச் செய்வதே
சரியாகும்.   பிணம் பதம் செய்வோர் கைகள்
பட்டால் தம் உடலுக்குக் கேடு என்று சொல்லி
விட்டார் என்பதற்காக அதை நாறவைத்துக்
கொண்டுசென்று புதைப்பது எப்படியும்
பொருத்தமற்றது அன்றோ?

பாடம் பண்ணுவோர் கைபட்டிருந்தால் பிணம்
கெட்டுப்போகாமல் நிகழ்ச்சி நன்றாகவே
நிறைவேறியிருக்கும். இந்த வேலைகளில்
ஈடுபடும் வல்லுநர்கள் உண்மையில் தங்கள்
தொழிலின்மூலம் ஒரு மாபெரும் சேவையைச்
செய்துவருகின்றனர்.

இது ஐரோப்பியக் கண்டத்தில் நடைபெற்ற      ஒரு
நிகழ்வு ஆகும்.

திருத்தம் பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.