Pages

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

மும்பை தொடர்வண்டி நிலைய மரணங்கள்,




கூட்டத்தி னுள்ளேபோய் மாட்டிக்கொண்டால்
குழித்தள்ளப் பட்டாலும் தெரியா தையா!
ஓட்டமொன்றை உள்ளவர்கள் எடுக்கும் போதோ
உன்னைநின்று பார்ப்பதற்கு நேர மேது?
வாட்டமுற வேண்டாமே வாரா நன்மை
வந்திடுமோ உனைத்தேடி கூட்டத் துள்ளே!?
ஆட்டநகர் மும்பாயில் ஆவி நீங்கி
ஐயோமரித் தாரிருபத் தின்மே லோரே.

கல்விழுந்த பாலமதில் காலே நோக
கடுகியந்தக் கூட்டமக்கள் ஓடுங் காலை
உள்விழுந்தார்  தப்பிடவோர் உய்வு கிட்டார்
உயிர்விட்ட பரிதாபம் உருக்கும் நெஞ்சை.
பல்விழுந்தே உயிரிருந்து தப்பி னோரைப்
பக்கல்மருத் துவமனைக்குத் தூக்கிச் சென்றார்
நெல்விழுந்து தரைகாணா நீக்க மற்ற
நீள்கும்பல் என்னிலதை நீங்கிச் செல்லே. 
-----------------------------------------

 பொருள் விளக்கம்:




குழித்தள்ள -  குழிக்குள் தள்ள.
ஆட்டநகர் -  களியாட்ட (மிக்க) நகர்; பல 
மகிழ் நிகழ்வுகளும் கிட்டும் நகர்.
கல்விழுந்த:   மேலிருந்து கல் பெயர்ந்து விழுந்ததனால்
பாலம் இடிந்துவிடும்  என்று அஞ்சி ஓடினார்கள் என்பது 
செய்தி.
மரித்தார் – இறந்தனர்.  மரி > மரணம் அடைதல்.
கடுகி – வேகமாக.
உள்விழுந்து – ஓடும் கூட்ட நெரிகலிலே விழுந்து.
பல்விழுந்தே உயிரிருந்து -  பிழைத்துக்கொண்டவர்கள்
அல்லது காயமடைந்தவர்களைக் குறிக்கிறது.  ஒரு 
வகைப் பிழைத்தோரைக் காட்டி அவர்கள் போலும் பிறவகைக் காயமடைந்தோரையும் உளப்படுத்துவது.
நெல்விழுந்து …….நீள்கும்பல்:  மிக்க இறுக்கமான நெரிசல் குறிக்கும்.
என்னில் அதை -  என்றால் அந்த

 


-------------------------------------------------------------

edited. will review.
Editing will take time as there are also data charges and software blockades by virus and third parties. 
error message:   Posting as B.I Sivamala
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.