Pages

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

சீனாவில் ஆண்டில் 260000 விபத்தில் இறப்பு.



எந்த மூலை ஆன போதும் உலகமீதிலே
இனிய மனித உயிர்கள் மாள்வ தோவிபத்திலே
உந்து வண்டி ஓட்டு நர்கள் சாலைமுத்தமோ
உடைதல் நெளிதல் வளைத லாகும் பொருளிழப்பிலே.

இரண்டி லக்கம் ஐம்ப  தாயி ரம்உ   யிர்களே
இறந்து போயி  னார்கள் என்ப வண்டிமுட்டிலே
திறந்த தேசம் எனறி டாத சீனநாட்டிலே
தெரிந்த புள்ளி விவரம் இங்குக் கூறப்பட்டதே.

இந்த உயிர்கள் தம்மைக் காக்க என்னசெய்தனர்
என்ப தொன்றும் யாம றிந்த செய்தி அல்லவே
வந்த செயதி கொண்டு சொல்லும் வாய்த்தளர்ச்சியே
வழக்க மான உளறல் அன்றிக் குதர்க்கமில்லையே.

சாவில் பாதி யேனும் குன்ற யாதும் செய்வரோ/?
செத்த நேர்ச்சி மட்டுக் கொள்ளு மாயின்நன்மையே
நோவி லாத குமுக மாதல் ஞாலப்பார்வையே
நூறு பாதி ஆயின் நொந்தும் இங்குசொர்க்கமே..



செய்தி விவரம் இங்கு:
http://www.chinadaily.com.cn/china/2016-05/24/content_25442984.htm 

உந்து வண்டி -motor cars (here accept this as all vehicles)
ஓட்டுநர் - drivers
சாலைமுத்தம் -  வண்டிகள் சாலையில் இடித்துக்கொள்வது

இரண்டிலக்கம் ஐம்பதாயிரம் 250,000
வண்டி முட்டு - சாலை விபத்து TRAFFIC ACCIDENT
அல்லவே - (  அன்று என்னும் ஒருமையைப் பயன்படுத்தவில்லை ) 
பேச்சு வழக்கு பின்பற்றப்பட்டது.  இலக்கணப் படி அன்று என்பதே சரி
எனவே ஒருமை பன்மை மயக்கம் ஆகிறது.
வாய்த்தளர்ச்சி - விசாரிக்காத பேச்சு.
குன்ற - குறைய
நேர்ச்சி - இங்கு விபத்தினால் இறப்பைக் குறிக்கிறது.
நோவு - துன்பம் 
ஞாலப்பார்வை - உலகநோக்கு
நொந்தும் - துன்பமிருந்தாலும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.