Pages

திங்கள், 17 ஏப்ரல், 2017

யானை கட்ட ஆலானம் வேண்டும்.

ஆலானம் என்ற சொல் இப்போது இயல்பான வழக்கில் வருவதில்லை என்றாலும்  ஆனை (யானை)ப் பாகர்கள் அறிந்த சொல். பிறருக்கு ஆனையினுடன் வேலைத்தொடர்பு ஒன்றும் இருப்பதில்லை ஆகையால் அவர்கள் அறிந்திரார்.

யானை கட்டும் கயிற்றுக்கு ஆலானம் என்று பெயர்.மெதுவாக‌
முயற்சி செய்து யானைகளைக் கட்டிவைப்பவர்கள் பாகர்களே.

யானை கட்டும்போது கயிற்றைக் கொஞ்சம் அகலவிட்டுக்
கட்டவேண்டும், அது பெரிதாகையால் கொஞ்சம் நடமாட‌
இடம்விட்டுக் கட்டுவர். ஆகையால் ஆலானம் என்ற சொல்லில்
முன் நிற்பது "ஆல்" என்பது.

ஆல் என்பது அகல் என்ற சொல்லின்  திரிபு.

அடுத்த சொல் ஆனை என்பது. இது ஐகாரம் கெட்டு. விகுதி
முன் "ஆன்" என்று  நின்றுவிட்டது.

ஆகவே ஆல்+ஆன்+ அம். இறுதி அம் என்பது விகுதி. இது
"ஆலானம்" ஆகிறது.

அரசரின் காலங்களில், யானைகள் மிகுதியான இருந்து,
யானைப் படையில் சேவை புரிந்தன. அப்போது இந்தச் சொல்
புழக்கதில் இருந்திருக்கும். தேவையான சொல்லாகவும்
இருந்திருக்கும். காலம் மாறி, பழைய அரசர்காலமும் போய்,
யானைகளை விலங்கு காட்சிசாலைகளில் காண நேர்கின்ற‌
இக்காலத்தில், இது பழம்பாடல்களில் வரும். அப்போது பொருளை
உணரலாம்.

புதிய சொற்களைப்  படைப்போர்,  இதில் கையாண்ட முறையைக் கைக்கொள்ளலாமே.  அதற்காக இதை அறிந்துகொள்ளுங்கள் .

யானை கட்ட ஆலானம் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.