Pages

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

"ஞாலம்." எப்படி வந்தது?

ஞாலம்.

ஞாலம் என்பதற்கு உலகம் என்பது பொருள்.

இந்தச் சொல் எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்.

ஞாலுதல் என்பது தொங்குதல் என்றும் பொருள்தரும். இதிலிருந்து
உலகம் என்று பொருள்படும் சொல் ஏன் வந்தது?

சிலர் உலகம் உருண்டையானது அல்லது வட்டவடிவம் உடையது என்று நினைத்தது போலவே வேறுசிலர் அது அண்டவெளியில்
தொங்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தார்கள். அதனால்
ஞால்+ அம்= ஞாலம் என்று ஒரு சொல்லால் உலகத்தைக் குறித்தனர்.

ஞாலம் என்பது வழக்கில் உள்ள சொல்லாகும்,

நீலம் (  நீலவானம் ) என்று ஒரு பாட்டெடுத்தால், அடுத்து
ஞாலம் ( ஞாலமீதில் ) என்று எழுதப் பொருத்தமான சொல்லாகும்.

ஞால என்பது தொங்க என்று பொருள்தரும்.


-------------------------


==============

ஞாலுதல் என்பது நாலுதல் என்றும் திரியும். நாலுதலும்
அதே பொருளை உடையது. தொங்குதல் என்பதே பொருள்.
நாலுதல் என்பது நாலல் என்றும் வரும். இந்த நாலுதலில்
உள்ள நால் என்ற அடி சி விகுதி பெற்று  நாற்சி என்றும் வரும்.
சி என்னும் விகுதி தொழிற்பெயரில் வருதற்கு இதுவும் ஓர் உதாரணம். (உது+ஆர்+அணம்). நாலுதல் தன்வினை; அது பிறவினையாக நாற்றுதல் என்று ஆகும். (  நால்+து+தல்).எனின்
தொங்கவிடுதல்.

நானிலம் என்பது பூமியைக் குறிக்கும். இதற்கு,  ஐந்து வகை நிலங்களில் பாலை நீங்கிய பிற நான்குமே சிறப்புடையது என்பதால் இவற்றை உள்ளடக்கி " நானிலம் " என்ற சொல் அமைந்தது என்பர்.
(  அறிஞர் க. ப. சந்தோஷம் ( மகிழ்நன் ) ).  எனினும் நால்+ நிலம் என்பது தொங்கு நிலம் என்றும் பொருள்கொள்ளும் என்பதறிக. இப்படி
நோக்கின், ஞாலம் என்பதே அதற்கும் பொருள் ஆகும்.

பூணூல் என்பது தோளிலிருந்து தொங்குநூலாதலால், அதற்கு நானூல்
என்றும் பெயர்.

நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய காலத்தில்
மூன்று ஆரிய வேதங்களே  (ஆரிய, சிறந்தோர்; அறிவாளிகள் ). நான்காவது இன்னும் எழுதப்படவில்லை. அல்லது புனையப்படவில்லை.  எனினும் நானூலாரால் பயலப்பட்டமையின்
நான்மறை என்றனர்.  எனினும் குலை முதலியன ஒன்றாய்த் தொங்குவதுடையது.  தொகு (தொகை நூல் ) என்பது இடைவிரிந்து
தொங்கு ஆகும்.  பின்னர் நான்காகி   எண்ணிக்கை  நிறைவு பெற்றது.




‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.