Pages

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஆதித்தன் ஆதியில் தன்னிலையாய் இயங்கியது

பூமி முதலிய கோள்கள் உருப்பெறு முன்னரே பகலோன் என்னும்
சூரியன் வான்வெளியில் தோன்றிவிட்டான்.  அவனிடத்து ஏற்பட்ட‌
ஒரு வெடிப்பின் காரணமாகவே பல துண்டுகள் பறந்து சுழன்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோளாகிவிட்டது . அதில் நம் பூமியும்
ஒன்று. இது ஒரு வானநூல் கருத்து. (தெரிவியல் :theory  தியரி என்பர்
ஆங்கிலத்தில். )

இதன்படி, சூரியன் ஆதியிலிருந்தான். அதிலும் தானே இயங்கினான்.
இப்போது இக்கருத்தை அவன் தன் பெயர்களுள் ஒன்றான ஆதித்தன்
என்பது நம் ஆய்வில் தெரிவிக்கிறதா என்று நுணுகி ஆராய்வோம்.

ஆதி: இது முதலில் இருந்தது என்பதைக் குறிக்கும். ஆகவே இந்த‌
வான நூல் கருத்தைத் தெரிவிக்கிறது.

ஆதித்தன் என்ற சொல்லில் அடுத்த சொல் " தன்" என்பது. ஆம்
தனியே தானாக இயங்கிக்கொண்டிருந்தது என்பதைத் தன் என்ற‌
சொல் நன்றாகவே தெரிவிக்கிறது.

எனவே ஆதித்தன் என்றால் ஆதியில் தன்னிலையாய் இயங்கியது
ஆதித்தன் ஆகிறது. இந்த அரிய சொல்லை இப்படி விளக்காமல்
வேறு மொழி என்று உரைத்து உண்மைக்குப் புறம்பான கதைகளைக்
கூறிக் குட்டை குழப்பாமல், ஆதி + தன் = ஆதித்தன் தமிழே என்றும்
அது அறிவியல் அடிப்படை உடைய சொல் என்பதும் அறிந்துகொள்ள‌
வேண்டும்.

இந்த அறிவியல் தெரிவியலை தமிழர் எங்ஙனம் அறிந்திருந்தனர் என்று
வினவலாம். இது தமிழரின் வானநூல் அறிவாழத்தை நன்கு காட்டுகிறதென்பதை ஒப்புக்கொண்டால் இக்கேள்வி எழாது. தமிழர்
அப்படி எண்ணினர்; அது சரியாக அமைந்துவிட்டது என்பதே சரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.