Pages

வெள்ளி, 24 மார்ச், 2017

தமிழக அரசின் குறள் கொள்கை

ஆயிரத்து முன்னூற்று முப்பதான‌ அருங்குறளும்
போயிருந்து பள்ளியிலே புகுநாட்கள் முதல்கற்பீர்
ஏயுணர்வு மிக்குவர இனியவாய பண்பமைந்த‌
சேயர்செஞ் சீர்பெறுவீர் செந்தமிழ்க்கோல் உத்தரவே.

இடர்கள்பல குமுகத்தில் ஏறுமுகம் இழிகுற்றத்
தடர்தொகையால் ஆழ்குழிக்குள் வீழ்படாமை ஆற்றிடவே
தொடர்தகவு  நடவடிக்கை எனப்பலரும் பாராட்டும்
சுடர்கொள்கை சூழ்பயன்சேர் செந்தமிழ்க்கோல் உத்தரவே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.