Pages

சனி, 11 மார்ச், 2017

சூத்திரம்.

ஒருவன் பிராமணனாகப் பிறந்தாலன்றி அறம் விளக்கும் குருவாகல்
ஆகாது என்பது பண்டையோர்  பின்பற்றி வந்த ஒரு சட்டநெறி. இது   brahma janatiti brahmanah. என்பதாகும்    

இது சில வேளைகளில் கடைப்பிடிக்கப்பட்டும் சிலவேளைகளில் நெகிழ்ச்சியாக விடப்பட்டும் வந்துள்ளமை, சரித்திரத்தின் மூலம் நாம்
அறிகிறோம். அது நெகிழ்ச்சி கண்ட காலத்து, சூத்திரர்களும் பிராமணர்
தொழிலை மேற்கொண்டனர்.

ஆனால் பிராமணர் சூத்திரரின்     தொழிலை மேற்கொள்வதும் பெரும்பான்மையே.  பல சூத்திரத் தொழில்களும் இனிமை பயந்து
பெரும்பொருள் ஈட்டற்கு வழிவிடுவன என்பது யாவரும் அறிந்ததே.
நடித்தல் , இசைபாடல் முதலியன குறிக்கலாம்.

பிராமணர் பிரம்மத்தை உணர்ந்தவர்.  அதற்கும் போதுமான வயதும்
அறிவும் தேவைப்படுகிறது. சூத்திரர்க்கும் அப்படியே. பெரும்பாலும் தொழிற் பூசல்கள்  மக்களைப் பாதிக்காமல் இருப்பதே இவற்றின் நோக்கமாகலாம்.
" Kalau sudrah sambhava"   என்று  சங்கத  நூல்கள் கூறுதலால்  இக்காலத்தில் அனைவரும்  சூத்திரர்களே   காரணம் எல்லோரும் ஆலோசித்துத்தான் செயல்படுகின்றனர்.
ஆக சூத்திர என்றால் என்ன?

சூழ்+ திறம்  = சூழ்த்திறம் > சூத்திரம்.

ஒன்றைச் சூழ்ந்து (ஆலோசித்து) அறிந்து திறம் காட்டுவோரே
சூத்திரர் ஆவர்.எனவே மூளை வேலையர் என்பது பொருள்.
இசை பாடுதல் சூத்திர வேலை. மூளையும் வேலை செய்யவேண்டும்.

சூழ்த்திறர் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்தது. றகரம்  ரகரம் ஆனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.