Pages

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

சம் தம் -மிலிருந்து வந்த கதை.

பல "தன்கள்" ஒன்றாக நின்றால் "தம்" என்பது தமிழ்மொழி

அவன் தன் தொழுகையைத் துவங்கினான் என்பது எல்லாம் ஒருமை. அதையே பன்மையில் மாற்றுவதானால் 

அவர் தம் தொழுகையைத் துவங்கினார்

எனல் வேண்டும்

அகத்தியர் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் இல்லாத பணிவு (மரியாதை)ப் பன்மை இப்போது இருப்பதால் "கள்" சேர்த்துக்கொள்ள வேண்டியதாகிறது.

"கள் "  இல்லாமல்  பன்மையை உணர்த்தப்  பாருங்கள் .

இப்போது பலரும் விரும்புவது:  "தங்கள் " என்னும் வடிவம்.

தாம்  > தம் .
தாங்கள்  >  தங்கள். 

தம் இன்னும் பன்மையாக நம்மிடம் இருக்கிறது. அது கூட்டு என்பதைக்
குறிக்கிறது. அதுவே "சம்" என்று மாறி மனிதர் கூட்டைக் குறியாமல்
பொதுவாக கூட்டு என்று பொருள்படும் அடிச்சொல்லாக மாறி
இந்தோ ஐரோப்பிய மொழிகள் உள்பட பலவற்றையும் வளப்படுத்தியதே
உண்மை.


இதை மேற்கொண்டு பின் ஆய்வோம்.

தம் தாம் என்பன எங்கிருந்து வந்தன?

சம்  தம் -மிலிருந்து வந்த கதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.