Pages

செவ்வாய், 17 ஜனவரி, 2017

கவலை தைப்பொங்கல்

பண்பாட்டின் முன்கூறாய்த் தழுவும் ஏறு
பைந்தமிழர் தைப்பொங்கல் வழுவி டாத‌
கண்தேடும்  நிகழ்வாக நடத்திப் போற்றும்
கலைமாணாக் கர்தம்பால் கடுமை காட்டி
விண்கீர்த்தி மண்மேலே விளைக்கும் காட்சி
விரிந்தஒளி பரப்பாலே அறிந்த காலை
உண்ணீரும் வறங்கூர்ந்த துன்பி னோடின் .
னொருதுன்பம் சேர்ந்திட்ட கவலை நொந்தேன்


கண் தேடும் =  எல்லோரும் காண விழையும் 

விண்கீர்த்தி மண் =  விண்ணளவு கீர்த்தியுடைய‌
மண், அதாவது தமிழ்நாடு.


வறம் கூர்ந்த = வறுமை ஏற்பட்ட‌. வற்றி விட்ட .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.