Pages

வியாழன், 22 செப்டம்பர், 2016

ஐயம் என்ற சொல்லையும்

https://sivamaalaa.blogspot.sg/2016/09/blog-post_69.html


http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_14.html



இவற்றைத் தொடர்ந்து :


முன்னிரண்டு இடுகைகளையும் ஊன்றிப் படித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் , ஐயம் என்ற சொல்லையும், சேர்த்து ஆய்வு செய்தல் நலம்.

ஒரு பொருளை அங்கு வைத்தோமோ இங்கு வைத்தோமோ என்பது போலும்
இருமுனை எண்ணங்கள் வரின், அதனை ஐயம் என்கிறோம்.

இச்சொல் அங்கு, இங்கு  என்ற இரண்டையும் உள்ளடக்கியது.

அ +  இ  + அம் =  ஐயம்.

அம் என்பது விகுதி.

அ + இ ‍=  அயி ஆகும்.   இது  அம் விகுதி சேர,  அயி என்பதிலுள்ள இகரம் கெடும். கெடவே  அய்  என்றே நிற்கும் ,   அய்  எனினும்  ஐ  எனினும்  வேறுபாடு இல்லை.

அய் + அம் ‍என்பது ஐ + அம் என்றாகும் பின் ஐயம் என்று முடியும்.

அங்கும் இங்கும் அலைந்து பிச்சை எடுத்தலும் ஐயம் எனவே குறிக்கப்பெறும்.  அங்கும் இங்கும் சுட்டு இவண் அலைதலைக் குறிக்க வரும்,

அங்கும் இங்கும் என்ற சுட்டுக்கள் இருமுனையையே விதந்து குறிப்பினும் பன்முனைகளில் எழும் ஐயமும்  இதிலடங்குவது ஆகும். தேவையில்லாமல் அதற்கு இன்னொரு சொல் அமைக்கவேண்டாமையின்,

அய் என்று நின்ற அமைப்பு இர் என்னும் வினையாக்க விகுதி பெற்று
அயிர் ஆகும்.  அயிர்த்தல் எனினும் ஐயம் கொள்ளுதலேயாம், உய்  >  உயிர் > உயிர்த்தல்  என்பது  இன்னோர்   எடுத்துக்காட்டு.

இதன் மூலம்  ஐயம் என்ற சொல் தெளிவுபடுத்தப்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.