Pages

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

எந்திரன் என்ற சொல்லை,,,,,,,,,,,,,,,,,,,,பாராட்டவே வேண்டும்

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_20.html



மேற்கண்ட இடுகையைத் தொடர்ந்து ===


சாமிநாத ஐயர் தோன்றாமலும் சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பிக்காமலும் இருந்திருந்தால், சங்க இலக்கியங்கள் இரா. அப்படியானால் இது தமிழ் இது அன்று என்று எவ்வாறு கண்டுபிடிப்பீர்,

எந்த இலக்கியமும் கிடைக்காத உலகத்துப் பல மொழிகளில் எப்படி ஒரு
சொல் அம்மொழிக்குரியது என்று கண்டு பிடிக்கிறார்கள்?

சங்கப் புலவன் பயன்படுத்திய ஒரு சொல் பிற மொழியிலிருந்து அவன்  அறிந்தது என்பதை எப்படி மறுப்பீர் அல்லது ஒப்புவீர் ?

இதற்கெல்லாம்  உங்களிடம் விடை  இருக்கவேண்டும்.  இது அறியாத போ து
இது தமிழ் இது அன்று என்பது கடினமே.

யாம் கவனிக்க விரும்பியது  எந்திரன் என்ற சொல்லை.  இந்தப் பெயரை ஒரு படத்துக்கு இட்டவர்களைப்  பாராட்டவே வேண்டும்

இயந்திரம் என்பது பொருள்    எந்திரன் மனிதனைச் சுட்டுகிறது .   அதாவது எந்திரத்தினாலான மனிதனுக்குப் பெயராகிறது.

அன்  விகுதி வந்தால் மனிதனைக் குறிக்கும்.  சில வேளைகளில் குறிக்காது:  எடுத்துக்காட்டு  :  சூரியன்.

எந்திரன் என்பது நல்ல தமிழ்.  இயந்திரம் > இயந்திரன் >  எந்திரன்,  இது திரிபுச் சொல் .

இயலாது என்பது ஏலாது என்று திரியுமே .

ஏலா இடர் ஒருவர் உற்றக்கால்  (நாலடியார் )

இயைய  > ஏய

 ஏய  உணர்விக்கும்  என்னம்மை  (  புலவன்  அம்பிகாபதி )

இவை நினைவில் முந்துபவை  ஆகும் .

இ + அம்   + திறம்  =  இயந்திரம் !!  \\

இ  :  இங்கே.

அம் :  அங்கு.      அ + கு =  அம் +  கு =  அங்கு.  மகரம் ஒரு சாரியை,

திறம் >  திரம்   போலிக் திரிபு.



 இங்கே இருப்பது தானேயோ நகர்ந்தோ சுற்றியோ எப்படியோ போனால் அதுவே  இயந்திரம் .அதாவது  மனிதனும் விலங்கும் இயக்கற்ற பிறவும் அல்லாதது.


The thoughts of ancient Tamils were extremely simple and direct. .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.