Pages

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

செருப்பு என்ற சொல்.


செருகுதல் என்றால் ஒன்றில் ஒன்றை இடைநுழைத்தல் என்று பொருள்படும்.  தோல்வார்களை ஒன்றில் ஒன்று பிணைத்துச் சேர்த்துத்
தைத்தே செருப்பு உண்டாக்கப்படுகிறது.  செரு என்ற  அடிச்சொல்லில்லிருந்து செருப்பு என்ற சொல் தோன்றிற்று.

செரு > செருகு.
செரு > செருகுதல்:   இடைநுழைத்தல்..\

செரு >  செருப்பு.

செருப்பு > செருப்பல் :  இச்சொல் வழக்கில் இல்லை.

செ(ரு)ப்பல் >  செப்பல்.

இதில் ருகரம் இடைக்குறைந்தது.

செரு> செருமான்> செம்மான்.

இதுலும் இடை ருகரம் இடைக்குறைந்தது.

வரு என்ற வினைப்பகுதியும் சொல்லில் தன் ருகரம் இழக்கும்

வரு> வ > வந்தான்.

பெருமான் என்ற சொல்லும் பெம்மான் என்று இடைக்குறையும்.

கரு> (கருமாளன் ) > கம்மாளன்.

இடைவடிவங்கள் வழக்கிறத்தல் மொழியில் இயல்பு.

சில  சொற்களில் ருகரம்  போய் அதற்குப் பதில் ஒரு ரகர  ஒற்றுத் தோன்றும்:

கரு   > கருப்பம்  >கர்ப்பம் .
கரு நாக்கு >  கர் நாக்கு.  (பேச்சில் ).
கருப்பூரம்  >  கர்ப்பூரம்  > கற்பூரம்  (கல்+ பூரம் , மற்றொரு முடிபு )
கருமம் >  கர்மம் .
கருவம் > கர்வம் .(  not to be pronounced as garvam  no place for G)
கருத்தா >  கர்த்தா .   from /connected to கருத்து.
தருதல் :  தரு > தருமம் > தர்மம்  (கொடை )  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.