Pages

வெள்ளி, 29 ஜூலை, 2016

ரேணுகாவுக்கு தமிழல்லாத நூலோர் கூறுவது

சங்கத மொழியில் ரேணு என்பது தூசு என்று பொருள்காணப்படுகிறது. எனவே ரேணு ‍  தூசிலிருந்து தோன்றியது  என்று நினைத்துக்கொள்வர்.
இர்+ ஏண் (ஏணு) = இரேணு என்பது, இருள்தோன்றும்படி மேலெழுவது என்று தமிழ் அடிச்சொற்களின்மூலம் பெறப்படுவதால், தூசு என்று அவர்கள்  கூறும் ரேணுவும் தமிழ் தந்த சொல்லே ஆகும். இதில் தப்பி ஓட முடியவில்லை.

தேவி தோன்றுங்கால் மனிதன் பார்த்துக்கொண்டிருந்து, தேவியானவள் புழுதியினின்று தோன்றியதாகக் கூறுவது, இவள் உண்மையில் தொழிலாள‌
மக்கள் வழிபட்ட கடவுள் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் வணங்கினர், அவர்களிடம் நாம் அறிந்து உண்மை கண்டு நாமும் வணங்கினோம் என்பதை மறைத்துக் கூறும் வழி இதுவாகும்.எப்படியாயினும் ரேணுகா தொழிலாளர் கடவுளே. அரசர்களும் பிறரும் அங்குபோய்ப்  புழுதியில்1 நிற்பது இயல்புக்கு மாறானதே.


----------------------------------------------------------------------------------------------------------------------------------

1  சில ஆலயங்களில், பூசைக்குப் பின் குங்குமம் தருவதில்லை;   வெட்டி எடுத்த மண்ணே தரப்படுகிறது. இவ்வம்மன் புழுதியிற் தோன்றியவள் (மண்ணில் வேலைசெய்வோரிடைத் தொழப்பட்டவள்) என்ற  தொன்மத்திற்கு ஏற்ப இது தரப்படுவது காண்க. ) இஃது இவ்விடுகையின் கருத்தை வலியுறுத்துவதாகிறது/.    அரிமாவிற்கு (சிங்கத்திற்கு)ப் பதில்

ஆ (பசு) போற்று விலங்காகிறது.  Also see: temple.dinamalar.com/New.php?id=594

2  https://www.facebook.com/rangammal/posts/422957651149491?stream_ref=10

3 இரு+ ஏணு + கா :  இது முன் இடுகையில் கூறப்பட்டது. இருகைகளும் இடுப்பில் வைத்திருக்கும் நிலை (மஹாராஷ்ரா – பண்டரிபுரம், கர்நாடகா – உடுப்பி)..  கா  - கை  என்பதன் திரிபு  எனினுமாம் ,

3    http://hinduspritualarticles.blogspot.sg/2015/10/blog-post_30.html?view=sidebar



4    எல்லையம்மாள்  > எல்லம்மாள் .  ஐகாரக் குறுக்கம் 


5    வெட்டியாரத் தொடர்பு:

      Easy further reading at : 

      http://tamil.thehindu.com/society/spirituality/புராணத்தைப்-போற்றும்-கெங்கையம்மன்
"      கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தை முன்னால் நின்றான். மகனின் செயலை மெச்சிய ஜமதக்னி முனிவர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தந்தையே, உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். இறந்த தாய் எனக்கு வேண்டும். அவரை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றான். மகனின் ஆசையை நிறைவேற்றப் புனித நீர் கொடுத்து உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்றார். தாயின் உயிர் கிடைக்கும் ஆசையில் ஓடிவந்த பரசுராமன், வெட்டியான் மனைவியின் உடலில் தனது தாயின் தலையை வைத்தும், தனது தாயின் உடலில் வெட்டியானின் மனைவியின் தலையை வைத்து அவசரத்தில் உயிர்ப்பித்துவிட்டான். இந்த புராணக் கதையை விளக்குமாறு, கெங்கையம்மன் சிரசு திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  "









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.