Pages

புதன், 27 ஜூலை, 2016

அயம். அயச் செந்தூரம்.



இந்தச் சொற்களையும் தொடர்களையும் ஆயுமுன்,  இரும்பின் மேன்மையை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.  பொன்னைக் கண்ட மனிதன், அதனால் நகை, ஏனை அணிகலன்களையே செய்தற்கு  இயன்றது என்பது  அறிந்தானோ ?மாந்தனின் நாகரிக வளர்ச்சிக்குப்  பொன் செய்த புண்ணியம், நகை வளையல்கள் என்று உடலில் தொங்கியதும் பணம் எனப் பயன்பட்டதுமாகும்.

ஆனால் இரும்பால் விளைந்த பயன் மிகப் பலவாம். அதனால் கற்காலம் என்று ஒதுக்கிய  வரலாற்றாசிரியர்கள் இரும்புக் காலமும் மேலானதே  என்று முடிவு செய்தனர்.இரும்பால்  ஆயுதங்கள் செய்து மனிதன் முன்னேறினான், இல்லாவிட்டால் மனிதன் எங்கேயோ பிற்போக்காய்க் கிடந்திருப்பான்,   தமிழில் சொல் அமைத்தவர்கள் இதை நன்குணர்ந்து
பொன்னினும் பெரிதான இரும்பை இரும்பொன் என்றனர். அதுபின் இரும்பு என்று திரிந்துவிட்டது என்று அறிஞர் கூறுவர்.

ஆகவே மனிதன் இரும்பை  வியந்து போற்றினான் என்று உணர்க‌

ஐ என்பது வியப்பு,  வியப்புக் குரியதை அய் அல்லது ஐ என்பதும் காணலாம். மேன்மையும் அதுவாம் .

ஐ > அய்>  அயம்,    அய் +அம்  =  அயம் .


வியந்து போற்றற்குரித்தாகிய இரும்பு. இரும்பொன் என்ற கருத்து
இங்கும் இலங்குகின்றது.

செந்தூரம் என்பது செந்தூளம் என்பதன் திரிபு ஆகும்,,

சிவப்புத் தூள் என்பதாகும்.  இதைப் பிற அறிஞர் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.