Pages

வெள்ளி, 1 ஜூலை, 2016

அதுபின் ப்ரசங்கம்.....

ஒரு மனிதன் தன் வீட்டினுள்ளேயே இருந்துகொண்டு தனிமையில் பேசிக்கொண்டிருக்கலாம்.  அவன் பேசுவது வேறு யாருக்கும் கேட்கப்போவதில்லை. (தற்காலத் தொலைத்தொடர்புகளைக் கணக்கில் கொள்ளவேண்டாம்.)   அவனுடைய சொந்த வீட்டாருக்கே கூட அதைக் கேட்டுக்கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்யும் செயலுடையாராய் இருக்கவியலுமோ என்பது   ஓர்  ஐயப்பாட்டுக்குரிய கேள்வியாகும். ஏசு நாதரேகூட இவ்வாறு சில கூறி அறிவுறுத்துகையில்  இவர் நம் அடுத்த வீட்டுத் தச்சர் மகனல்லரோ ,  இவர் யாது நம்மிடம் கூறவேண்டியுள்ளது என்று பேசிக்கொண்டனர் என்ப.  எனவே  பேசுகிறவன் வெளியில் சற்றுத்  தொலைவில் போய்ப்  பேசினால் ஒருவேளை எடுபடலாம்.  சும்மா பேசாமல் ஒரு சங்கையும் கொண்டுபோய் ஊதிக்கொண்டு பேசினால் நாலு பேர் கூடி நின்று கேட்பார்கள். இதனை புறத்தே ஊதப்படும் சங்கு
என்ற பொருளில் புறசங்கம் என்றனர்.   இவ்வழக்கே நாளடைவில்  ப்ரசங்கம் என்று கொஞ்சம் திரிந்து வழங்கியது,  சங்கு என்பதும் சங்கம் என்பதும் ஒரு பொருளனவாகும்.

இதுபோலும் திரிசொற்களைச் செந்தமிழில் சேர்த்துவிடாமல் அவற்றை வேறொரு தொகுதியில் சேர்த்து வைத்ததும் ஒரு பாராட்டுக்குரிய செயலே ஆகும்.

எனினும் இவைபோல்வன தமிழ் மூலங்களை உடைய சொற்களே ஆகும், சங்கு என்பது பல்வேறு திரிபுகளுடன் பல மொழிகளிற் பரவிப் பெருமை சேர்க்கிறது. அவற்றைப் பட்டியலிடல் வேண்டாம்,

புற சங்கம் > ப்ரசங்கம்.

புறத்தே சங்கு ஊதிக் கூட்டத்தைக் கூட்டிப் பேசுவது  புறசங்கம்,  அதுபின் ப்ரசங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.