Pages

சனி, 7 மே, 2016

முகுந்தன்

பரந்தாமன் என்ற சொல்லைக் கேட்டுப் பரமும் தாமுமாய்ப் ப‌ற்றிலாழ்ந்து பரவயப்பட்டு நிற்றற் கருத்தின் உட்பொதிவை அறிந்துகொண்ட  நாம்,  அடுத்து முகுந்தன் என்ற சொல்லின் முன்வரவையும் உணர்தல் முக்கியமே.

இச்சொல்லின் பின்பாதியில் உள்ளது குந்தன் என்பதாகும். அன் விகுதி தென்மொழிகளுக்குச் சிறப்புரிமை எனினும், வடக்கில் அன் விகுதி இலது எனினும்,  அதையும் சேர்த்தே கவனிப்பதில் வரும் குழப்பம் யாதுமில்லை.

கண்ணன் பற்றரின் முன் இருப்பவன். அதனாலேதான் அவன் கடவுள் என்று அறியப்பட்டான்.  கடவுள் எம்மொழியினரிடத்தும்
முன் அமரும், முன் நிற்கும், முன் விளங்கும் முன்னவன். குந்துதல் இருத்தல்.  எனவே குந்து+ அன் =  குந்தன் ஆகிறான்.
அன் விகுதி இல்லா மொழியில் குந்தா என்று நிறுத்தப்படும். இதில்
ஒரு வியப்புமில்லை.

முன் என்ற சொல், மு என்று கடைக்குறையும்.  முன் என்பதற்கு முந்திய  அடிச்சொல் முல் என்பது.  முலை என்ற சொல்லில் முல்+ஐ என்பதில் அது உள்ளது.  முல்> முன்> மு,  (ல் >ன்  திரிபு).

எனவெ

மு + குந்து + அன் =  குகுந்தன். (முன்னவன்).
மு + குந்து + ஆ =  முகுந்தா. (அன் விகுதி வடதிசை மக்களிடம்
இல்லை).


எனவே  முகுந்தன் , கடவுள் , முன்னிருப்போன் என்ற சொற்பொருள் பெறப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.