Pages

செவ்வாய், 17 மே, 2016

செருப்பணிந்து கோவில் செல்லுதல்


செருப்பை அணிந்தொரு கோயிலிற் சென்றால்  இறைவனையே
மறுப்பதற் கொத்தல் செருப்பினைக் கள்வார் எனக்கவன்றே
இருப்ப திதுமனம் கொள்வாய் இதற்கணி யாதுசென்றால்
இழப்பதொன் றில்லையொண் பாதங்கள் மட்டுமே எண்ணினையே.


செருப்பை அணிந்து ஒரு  கோயிலிற் சென்றால்  --  காலணிகளை  அணிந்துகொண்டு ஓர்  ஆலயத்திற்குப்  போனால் ;

செருப்பினைக் கள்வார்  என  =  (வெளியிற் போட்ட ) செருப்பினை யாராவது திருடிவிடுவார்கள்  என்று ;

கவன்றே இருப்பது  -   கவலையோடே  உள்ளே அமர்ந்திருப்பது;

இறைவனையே மறுப்பதற்கு  ஒத்தல் -   கடவுளையே இல்லை யென்று  சொல்வதற்கு  ஒப்பாகும்;  (  காரணம் இறைப்பற்றில்  ஈடுபடாதிருந்தமை ;)

இது மனம் கொள்வாய்  - இதைப் புரிந்து கொள்வாயாக;

இதற்கு-   இப்படிச் செய்யாமல் ;

செருப்பு  அணியாது சென்றால்  -    செருப்பே போடாமல் போனால்;

இழப்பதொன்றில்லை  -   நீ  அடைந்த நட்டம் ஒன்றுமில்லை;


ஒண்பாதங்கள் மட்டும் எண்ணினையே -    செருப்புக் கவலை ஒழிந்து  இறைவன்  பாதங்களை மட்டுமே  உன் எண்ணத்தில்  நிறுத்தி  நீ  வெற்றி கண்ட காரணத்தினால்.

என்றபடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.