Pages

சனி, 5 மார்ச், 2016

"விற்பன்னர்"

ஒரு பொருளை விற்பதற்குச் சில வேளைகளில் வணிகர் சிலர் மிக்கத் திறமையுடன் பேசுவர்.  மந்திரங்கள் சொல்லி, பாம்பு  விளையாட்டும் காட்டி அது கடித்தால் இந்த மருந்தைப் போடுங்கள்  விடம் ஏறாது,  ஏறின விடமனைத்தும் இறங்கிவிடும் என்றெல்ல்லாம் விளக்கம் தருவதற்குப்  பேச்சுத் திறன் முதன்மை  யானது ஆகும்.  இவர்கள் விற்பனைக் கலைஞர்கள்

அறிஞர்  சிலர்க்கும் இத்தகு திறன் காணப்படுகிறது.

ஒரு சமயம் ஒரு சீன நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.  இவர் சிங்கப்பூர் வானூர்தி நிலையத்தில் அறிஞர்  நெல்சன் மெண்டெலா  அவர்களின் உரையை நேரில் கேட்டவர்.  "இது அன்றோ  உரை! சிலர்  எழுதி வைத்துக்கொண்டு பேசுகிறார்களே! அதிலும் கூட தடுமாறுகிறார்களே "   என்றார்.   நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்  அரசியல் அறிஞர் லீ குவான்  யூ அவர்களும் சிறந்த உரைவலர் ஆவார்.

இவர்கள் திறம் ஒரு வகையில் விற்பனைத் திறத்துடன் ஒப்பீடு செய்யத் தக்கது ஆகும்.  செலச் சொல்லும் செந்நாப்போதார் சீர்மிக்க இம்மாமனிதர் .

இது தொடர்பில் "விற்பன்னர்" என்ற சொல்லை அலசுவோம்.

விற்பு  =  விற்பனை . விற்பனைக் கலை குறிக்கிறது.

அன்னர்  =  போன்றவர்கள்.

கலை குறித்த "விற்பு"    அதன் கலை உடையாரைக் குறித்தது.   இது ஆகுபெயராய் நின்றது.

முழு விரிப்புடன் சொல்லின்  "விற்பரன்னர் " எனல் வேண்டும்.  இரண்டு "அர் "
இன்றி  ஒரு அர்  வரச்  சொல் அமைந்தது சொற்புனை புலமை ஆகும்.  ஒரு ரகரம் மறைந்த இடைக்குறை எனினுமாம்.

வில் போல் குறிவைத்துப் பன்னுவோர் என்று கூறுவதும் கூடும் .  பன்னுதல்  -  சொல்லுதல்.

அறிவோம்  மகிழ்வோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.