Pages

புதன், 2 மார்ச், 2016

அபத்தம்

அபத்தம்

எதிரிகட்குப் பற்றலர் என்றும் கூறுவதுண்டு.  எவ்வாற்றானும் பொருந்திவராதவர்களுக்கு அந்தச் சொல் மிக்கப் பொருத்தமுடையதே. பானையில் உள்ளது பத்தாது ‍  அரிசி கிளைந்து வைக்கவேண்டும் என்று பேசுவர். பற்றாது என்பதே பத்தாது என்று பேச்சில் மாற்றம் பெற்று வரும். என்ன நடந்தது என்பதை எந்து பற்றி என்பர் மலையாள மொழியில்! எதைப் பற்றிப் பேச்சு நடக்கிறது என்று கேட்பதுண்டு.

பற்று என்ற சொல் பற்றி என்றாகிப் பின் பத்தி என்றாகி இறுதியில் பக்தி என்று விளைந்தது. "பத்தி செய்து பனுவலால் வைத்ததென்ன வாரமே!"  என்ற தாயுமானவரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
தேவாரத்தில் "பத்தி" என்றே வரும்.  ஆனால் பக்தியைத்தான் பத்தி என்று பாடியுள்ளனர் என்று தமிழாசிரியன்மார் சொல்லிக்கொடுப்பர்.
ஆனால் பற்று > பற்றி > பத்தி பின் பக்தி என்பது இப்போது மிக்கத் தெளிவு பெற்றுள்ளது.  முத்தி  முக்தி ஆனாற்போல்.  முது >  முத்து > முத்தி > முக்தி;  முற்று > முத்து > முத்தி .

எமது எழுத்து அதைப்பற்றி அன்று.   அபத்தம் என்பது பற்றியே.

பற்றுதல் என்பது பொருத்துதல் என்றும் பொருள்தரும்.  இரும்புத் துண்டுகளைப் பற்றவைத்தல்  என்பதுண்டு,  அதாவது தீயினால் உருக்கிப் பொருத்துதல்  என்பதே இது.

அபத்தம் என்பது பொருந்தாதது.   பற்று >  பத்து > பத்தம்   அல்  >  அ .  அல்லாதது.   அ + பத்தம்  = அபத்தம்.

இதன் மூலமும் தமிழ் தான்.  இந்தோ ஐரோப்பியம் அன்று,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.