Pages

வெள்ளி, 29 ஜனவரி, 2016

அட்சய பாத்திரம்

அட்சயப்  பாத்திரம் என்பது ஓர்  அழகான பெயர்.  இது அள்ள அள்ளக்  குறையாது வழங்கிக்  கொண்டிருக்கும் ஓர் ஏனத்தைக்  (  utensil  ) குறிக்கும்.  பழைய  மணிமேகலைப் படத்தில்  " அட்சயப் பாத்திராமி தாருக்குச் சொந்தமே?   ஆனந்தமே" என்று  கே.பி. சுந்தராம்பாள் பாடுவார்.

இந்தச் சொல்லை ஆய்வு செய்வோம்.

எல்லோரும் வந்து உணவை அள்ளிக்கொண்டு போகும் ஐயப் பாத்திரம்.

ஐயம் = பிச்சை .

இப்போது மறுபுனைவில் ஈடுபடுவோம்,

அள்ளு + ஐய   பாத்திரம்,

அள்  சு  ஐய  பாத்திரம்.

அட்சு  ஐய  =  அட்சைய  பாத்திரம்.

> அட்சய பாத்திரம். (  சை > ச    )  ஐகாரக் குறுக்கம்)

அள்  என்பது  வினைப் பகுதி.     சு  ஒரு விகுதி 


அள் என்பது  அள்ளு என்று உகரத்தில் முடிகிறது. உ  ஒரு சாரியை. வினையாக்க விகுதி .எனலும் ஆம். எது என்ற ஆய்வு பின் ..

அள்ளையப் பாத்திரம் என்றால்  அள்ளு ஐயப் பாத்திரம் என்று  தமிழ்ப் பேச்சிலேயே தங்கிவிடும். வேலை கிட்டி வெளி நாடு செல்வோரை நாம் தடுக்கிறோமா? அதுபோலத்தான்.


இந்தச் சொற்புனைவில்  சிறிய மாற்றத்தையே செய்துள்ளனர்.

அள்ளு(தல் )>   அள்+ ள்​ +உ  >   அள் + ( ள் + ச்  + உ )  >  அள்சு  > அட்சு . இதில் ஒரு 
ச்  மட்டுமே நுழைக்கப்பட்டது.   மற்றவை இயல்பாக நிகழும் திரிபுகள்

ஒரே  ஒரு சகர ஒற்றைப் போட்டுப்  பெரிய மாற்றமாக வெளிப்பட்ட சொல் இதுவாகும். இதைப் புனைந்த புலவர் மிக்கக் கெட்டிக்காரர். இதுபோன்று புதுப்புனைவுகள் மேற்கொள்ளத்  திறன்பெறுதல் நன்று. 

இப்படியும் காட்டலாம்:

அள்ளு  ஐயப்  பாத்திரம்>
அள் சையப்  பாத்திரம் >
அட்சையப் பாத்திரம் >
அட்சயப் பாத்திரம்.

இதில் அய்ய அல்லது ஐய என்பது  சை ய  என்று ஆனது
அகர வருக்க -  சகர வருக்கத் திரிபு.
இன்னோர் உதாரணம்:  அமணர் > சமணர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.