Pages

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

சாமிஒன்றாய் இருந்தாலும் வேறு பட்டோர்

மனிதருள்ளே வேற்றுமைகள் கணித்துக் கூற
மாமேதை என்போர்க்கும் இயன்றி டாதே!
புனிதரொடு பாவிகளும் புரட்டர் தாமும்
போலிகளும் புன்மையரும் ஒருபக் கத்தில்!
வனிதையர்கள் ஆடவர்கள் உருக்கு றைகள்
வளர்ந்துயர்ந்த நெட்டையர்கள்  குறளர் மற்றும்
தனியழகில் வெள்ளைமஞ்சள் கறுத்த தோலர்
தனித்தனியே பேச்சில்பல மொழிகள் கொண்டோர்

சாமிஒன்றாய் இருந்தாலும்  வேறு பட்டோர்
சாற்றுங்கால் ஒருமையுறு சாய்வு கொண்டு
பூமிஒன்றாய்ப் புகப்பெற்றுப் போற்றும் வாழ்வைப்
புதைபொருளாய் அடைந்திடவோர் புத்தி வேண்டும்;
ஆமிதுவே புதுமையெனும் புத்தி ஆகும்
ஆழ்ந்தறிந்தார் அமைவினிலே  ஆங்குத் தோன்றும்
ஏமுறவே விழைந்தாரை ஈமக் குண்டால்
இரக்கமறக் கொன்றார்க்கு இல்லை அன்றோ

Our hearts are with the peaceful marchers killed in Turkey with bombs.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.