Pages

வெள்ளி, 5 ஜூன், 2015

Malaysian PM and his critics' challenge

தோன்றின் புகழொடு தோன்றுக
வள்ளுவப் பேரறிவாளன்
வல்லோனாய்த்   தங்க  விழைந்தானுக்கு
 வழங்கிய அறிவுரை இதுவாகும்

தோன்றித் தொந்தரவுகளே வருமென்றால்
தோன்றுவதுதான் எதற்கு?
என்ன பயன் நாட்டுக்கு தனக்கு? பிறர்க்கு?
தோன்றாமையே யாண்டும் நன்று.

கணக்குகள் இன்னும் பார்த்து முடிக்கவில்லை
பிணக்குகள் ஆகையால் வருமே
மணக்கும் மல்லிகைக்  காடாகாதே
 மாந்தர் சேரும் இடமது:
நினைக்கும் இன்னல்களும்
நினைக்கவே  மாட்டாத இன்னல்களும்
ஊறும் இடமாகும் அது
மாறாது துன்பம்


https://sg.news.yahoo.com/malaysian-pm-slammed-failing-face-critics-scandal-074532124.html



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.