Pages

ஞாயிறு, 7 ஜூன், 2015

Malaysian Earthquake, reasons and beliefs,,,,,,

மலைவாழ்  ஆவிகளை
மதிக்காமல் படமெடுத்துக் 
கொலைசூழ் ஆத்திரத்தைக்
குத்திவிட்ட காரணமோ
நிலையாழ் பெரும்பாறை
நிலம்தளர்ந்து புரண்டிழிந்து
தலைகீழ்த் தடுமாற்றம்
தந்துயிர்கள் குடித்திடவே

இங்கு  மலை வாழ் ஆவிகள் என்றது கோத்த கினபாலு என்ற மலேசிய சபா  மாநில மலைப் பகுதிகளில் வாழ்வனவாக அவ்விடத்துப் பழங்குடியினரால் நம்பப்படும் ஆவிகளை,

ஐரோப்பியர் சிலர் அம்மணப் படங்களை அங்கு எடுத்து ஆவிகட்கு ஆத்திரம் ஊட்டியதாக ஒரு குறை எழுந்தது. அதனால்தான் நிலநடுக்கம் நேர்ந்ததாம்.  

காரணமோ என்றது இதுதான்   காரணமோ என்று வினவிய வாறு.

நிலையாழ் என்பது நிலை ஆழ் என்று பிரியும்,  இது ஆழ் நிலை என்று பொருள்படுவது.

ஆழத்தில் நிலை கொண்டிருந்த பாறைகளுக்கு இது அடையாக வருகிறது. உட்பதிந்திருந்த பாறைகள் நில நடுக்கத்தில் பெயர்ந்து வீழ்தல்  வரணிக்கப் படுகிறது.

இழிந்து என்பது இறங்கி  என்று பொருள் தரும்.

மற்ற  வரிகள் எளியவை


16 dead after Malaysia quake loosed 'rocks as big as cars'

https://sg.news.yahoo.com/singapore-says-5-students-1-teacher-killed-malaysia-060326050.html

https://sg.news.yahoo.com/democracy-great-game-musical-chairs-says-dr-m-160600748.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.