Pages

சனி, 4 ஏப்ரல், 2015

உபத்திரவம்

இனி உபத்திரவம் என்ற "சமஸ்கிருதச்" சொல்லை   ஆய்ந்தறிவோம்.

முதல் வேலையாக இது சமஸ்கிருத அகரவரிசையில் உள்ளதா என்று பார்த்தல் கடனாகும்.

எமக்குத் தெரிந்தவரை   நாம் கருதவேண்டிய "உபத்ர...."  எனல் தொடக்கத்துச் சொற்கள் இரண்டே  அகரவரிசையில்  உள்ளன.  அவை வருமாறு:-

1 உபத் ர ட் .
2 உபத்ற்ண்ய 

உபத்ரட்  என்பது  துளைத்தல் என்று பொருள்படும்.   இதிலிருந்துதான் வந்திருக்குமோ?  காலை கையை உடலை. மனத்தைத் துளைக்கின்ற விடயம் என்கிற பொருளில்  நேரடியாகக் கடன்பெறாமல், அதிலிருந்து பொருள் பெறப்பட்டு  அமைந்த சொல்லாய் இருக்குமோ?

உபத்ரண்ய என்பது பாம்பு குறித்தது.  பம்புபோல் நெளியும் விடயம் என்றபடி வந்திருக்குமோ? அப்படியானால் அது இன்னும் வந்துசேராத உபத்திரவத்தைக் குறித்திருக்குமோ?  இது பொருத்தமில்லையே!

சமஸ்கிருதத்தில் "உப" என்பதன் பொருள் இருக்கட்டும்.  தமிழைப் பொறுத்தவரை,  உவ-  என்றால்  முன்னிருப்பது.  இது உகரச் சுட்டடிச் சொல்.  ஆனால் உது,  உவன் என்பன இலக்கண நூல்களில்மட்டுமே கணப்படுவது .  வழக்கொழிந்துவிட்டது.

ஆனால் அது அவன், இவன் இது என்பன இன்னும் உள்ளன. சுட்டுக்கள் மூன்று, அவை அ, இ, உ ஆகும்.

உபத்திரவம் என்பதில் திரவம் என்பது உண்மையில் துருவுதல் என்னும் வினையிலெழுந்த துரவம் ஆகும்.  துருவு> துருவு + அம் = துரவம்  (ரு >ர  திரிபு ) ஆம்.   துருவம் என்பது அதே அடிப்பிறந்த இன்னொரு தொடர்புடைய சொல் ஆகும்.

ஆக,துருவு+அம் = துருவம்  (இதில் "வு " என்பதன் உகரம் கெட்டது .)
துருவு+ அம்  = துருவம் >  துரவம் > திரவம் . முழுச்சொல்லின் பகுதியாய் வருகையில்  துருவம் என்ற பகுதிச்சொல்  இத்திரிபுகளை அடைந்தது. 


 உவ + துருவம் =  உவத்துருவம் > உவத்திரவம்> \
 உவத்திரவம்    என்றால்  உங்கள் முன் தோன்றி உங்களைத் துளைக்கும் துன்பம்

ஏனைச் சொற்களைப்  பிரித்தல் போல்   உப + திரவம்  என்பது  பிறழ்பிரிப்பு ஆகிவிடும்.   அப்படிப் பிரித்தால்  கிடைக்கும்  பொருள்  supporting liquid என்பது. அது பொருளன்று. .

உவத்  துருவு  :இதுவே சமஸ்கிருதத்தில் உபத்ற்ட்  என்று திரிந்து நிற்கின்றது.

பேச்சு வழக்கில்  ஒவத்திரியம் என்றும் வழங்கும் 

----------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
ப - வ  திரிபு:  என் முன் இடுகைகள் காண்க.   உப = உவ. இந்த உப என்பது  "துணை"  என்னும் பொருள் உடையதன்று.

துருவுதல் =  துளைத்து வெளிப்படல்.

இது பேச்சு வழக்கிலிருந்து சங்கதம் சென்றது.  மிகத் திரிந்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.