Pages

வியாழன், 2 ஏப்ரல், 2015

பரிதியும் நிலவும்


பரிதிலீ  குவான்யூவும் மறைந்த போதும்
பாரிலொளி ஏற்றொளிரும் நிலவாய் நின்றார்
அரிதினீ டுலகுபெறு செல்வ மான
அவர்பெற்ற நன்மகனார் என்றால் உண்மை
சுருதியோ டிழைகின்ற இலயம் போலும்
சூழ்தருவ தனைத்தும்நன் கிணக்கிச் செல்வார்
கருதியோர் சிங்கையுல கின்முன் செல்லும்
காண்பரொரு நாடிதனில் ஐய முண்டோ.

அரும்பொருள்:


பாரில் ஒளி  ஏற்று ஒளிரும் :  அச் சூரிஅனின் ஒளியைப் பெற்றதனால்  குளிர்ந்த  ஒளி வீசுகின்ற;

நிலவாய் நின்றார் : அரசியலில் ஒரு மதியாக நிலை கொண்டார்.

அரிதின் ஈடு உலகு பெறு:  உலகம் அரிதாக  ஈடாக ப் பெறுதலை உடைய

கருதியோர் :  சிந்தனை செய்வோர்

சிங்கை உலகின்முன் செல்லும் நாடு; கருதியோர் இது காண்பர்; இதில்  ஐயம் உண்டோ என்றபடி மாற்றுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.