Pages

சனி, 25 ஏப்ரல், 2015

பத நீர்.

சில உலக வழக்குச் சொற்கள் இலக்கியத்தில் (செய்யுள் வழக்கில்)  இடம்பெறாமல் இருக்கும்படி புலவர்கள் பார்த்துக்கொண்டனர்,  மக்கள் மொழியினின்று சற்று  வேறுபட்ட உயர்தர மொழியையே தாங்கள் பயன்படுத்துவதாகப்  புலவர்கள் பெருமை கொள்ள இது அவர்களுக்கு வசதியைத் தந்தது.  இது தமிழில் மட்டுமா?  Queen's English  என்ற ஆங்கிலம்  உயர்தர வழக்கையே குறிக்கிறது.  

நாமறிந்த மலாய் மொழியிலும்  அரசவையில் கடை ப்பிடிக்க வேண்டிய மரபுகளும்  அரசரிடம் பயன்படுத்தத் தக்க உயர்தர மொழி வழக்குகளும்  இன்னும் உள்ளன.  காமு, லூ,  அவாக்  முதலியவை விலக்கப்பட்டன . அக்கு என்பதினும்  ஸாய என்பதே விரும்பப்படும் சொல்.  
வணிக நிறுவனங்க்களும்கூட  "அண்டா " என்னும் சொல்லையே   பயன் படுத்துகின்றன. 

எல்லாம் மனித நாவினின்றும் எழும் சொற்களே அல்லவோ?

பத நீர் என்ற சொல்லை இப்போது பார்க்கலாம்.  இதைச் சங்க இலக்கியத்தில் தேடிக்  கண்டு பிடியுங்களேன்.  இதை மக்கள் பதனி என்பர்.

நீர் என்பது குறுகும்.

வாய் நீர் >  வானி,  வாணி.
பாய் நீர் >  பாணி.   (பாயும் நீர் :  ஆற்று நீர்.)
கழு நீர்  >  கழனி   (கழனிப் பானை).
தண் நீர்  >  தண்ணி.
வெம் நீர் >  வெந்நீர்.>  வென்னி .

பதம் என்பதும் தமிழே.  பதி + அம்  = பதம்.   இது இந்தோ ஐரோப்பியத்தில்  ( அவஸ்தான் முதலிய  " மேலை" ஆரியத்தில் )  உள்ளதா என்று கண்டுபிடியுங்கள்.  இல்லாவிட்டால்,  சமஸ்கிருதம் இதை உள் நாட்டில் (local)
மேற்கொண்டதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.