Pages

சனி, 14 பிப்ரவரி, 2015

தாளிகைப் பலம்

மாபெரும் ஆற்றல்
மாநில மீதினில்
அரசுகள்  ஏறவும்
அவற்றின் வாழ்வு தீரவும்
தாளிகை என்னும் தரமுயர் பொருளால்
சாலும் அதற்கே  சரியீடு காண்கிலம். 
வேண்டிய வேண்டியாங்கு விழைந்தது செயவும்
காரணம் அதற்குப் பொருத்தமாய்க் கூறவும்
அவற்றிற் கன்றி  ஆகுமோ பிறர்க்கே?
விரும்பா தாரையும் வேறுவழி இன்றி
கரும்பெனப் போற்றும் கலைகை வந்ததே!
தொல்லை ஈதிவ் வில்லை வளைக்க‌
தொல்பழ மன்னர்க்கு வில்லங் கில்லை!
இதனின் வலிமை அறிந்தே
முதலதை அடக்க முனைந்தனர் சிலரே.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.