Pages

சனி, 24 ஜனவரி, 2015

பாராளும் மன்னனாய் பக்சே


பையவே  பார்த்தலும் பாராளும் மன்னனாய் 
வாழ்ந்துள்ளான் இராச   பக்சே
கொய்யவே கைவந்த கோலத்துக் கனிகள்போல்
காய்த்திட்ட பணத்தை உண்டான்
நையவோ பிறந்தார்கள் நாட்டினரும் நாசவியற்  
குண்டுதுளைக் காத நேர்த்தி
ஐயகோ ஐம்பதிற் கதிகமாம் உந்துகளும் 
அணியாகப் பயன்செய் தானே

பணம்  என்பது அரசுத் தோட்டத்தில் காய்க்கிறது;  அது ராஜ பக்சேவுக்கு காய்கள்  தாம் . காய்கள் என்பவாதலின்  அவன் உண்ணற்குரியனவல்ல.
கொய்யக் கைக்குள் வந்த அழகிய கனிகளாய் அவன்  எண்ணி அவற்றை  உண்டுவிட்டான்  என்பது  கருத்து.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.