Pages

புதன், 29 அக்டோபர், 2014

A post content got lost

குதிரை  மறமென்ப தொன்றை எழுதிட‌
கோதற நெஞ்சம் முனைந்ததே
அதனை எழுதிப் பகுதி கழிந்தபின்
சட்டென் றதுசென்று மறைந்ததே
இதுவென்ன என்று‍நான் காணப் புகுந்தேனே
ஏதும் அறியாமல் ஒழிந்ததே
மதுவுண்டு விட்டதோ மடியின் கணினியே
மாலுமென் நெஞ்சிதே உண்மையே.

மீண்டும் எழுதிடும் ஆர்வம் உள்ளதோ
மேல்துன்பில் உள்ளம் நனைந்ததே,
ஈண்டு மணிநேரம் ஓடிக் கழிந்தபின்
ஏலுமேல்  காண்!பழம் கனிந்ததே !
மூண்ட நினைவலை மோதும் கரைதனில்
முன் அது வந்திடும் ஒதுங்கியே
தாண்டி வருமெனத் தக்க படிநம்பு
தமிழ்வெல்லும் இன்றிதே உண்மையே


There was a service disruption  causing some problems.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.