Pages

புதன், 16 ஜூலை, 2014

பல்லே இல்லாத பல்லிக்கு...........

இந்த இடுகையின் ஆய்வுப் பொருள் பல்லி  என்ற சிற்றுயிரி ஆகும்.

பல்லே இல்லாத பல்லிக்கு எப்படிப் பல்லி  என்று பெயரிட்டனர்?

பன்றிக்கு நல்லபடியாகப் பெயர் அமைந்துவிட்டது. பன்றிக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் பல்லின் காரணமாக  பல் + தி  =  பன்றி என்று பெயர் .  பல் +தி என்பது "பற்றி" என்று வல்லெழுத்து வராமல், பன்றி என்று மெல்லேழுத்தில் போட்டது தமிழனின் சொல்லமைப்புத் திறன் எனில் அது மிகையன்று. சில வேளைகளில் இதற்கு நேர்மாறான உத்தி பின்பற்றப்படும். கன்று + ஆ  = கற்றா என்பது காண்க.

எது இனிமையோ அதுவே அமைக்கப்படும்.

மீண்டும் பல்லியிடம் வருவோம்.

இந்தச் சொல் முன்னாளில் "பல்லிலி "  என்று இருந்தது தெளிவு.  பல் இல்லாதது என்பது பொருள்.  நாளடைவில் அது ஒரு லிகரத்தை இழந்து, பல்லி  ஆயிற்று. "லிலி " என்று முடிவது, வாயொலிக்க   நன்றாக இல்லை.

இரட்டித்த இரண்டு  "லி" யில்  ஒன்று மறைந்தது போலவே வேறு சில சொற்களிலும் நிகழ்ந்துள்ளது .  ஒன்று எடுத்துக்காட்டுவோம்:

ஆதன் + தந்தையார் =  ஆதந்தந்தையர் >  ஆந்தையார்.

இங்கு "தந்தந்" என்று இரட்டித்த இரண்டில்  " தந்த" மறைந்துவிட்டது.

அறிஞர் சிலர் வேறு விதமாகக் கூறியிருந்தபோதும்  இதுவே சரியான முடிவாகும்.

பல்லி பற்றிய சில விடயங்களை அடுதது வரும் இடுகைகள்  ஒன்றில் காண்போம்.

--------------------------------

சண்முகத்தாய்  >  சம்முத்தாய் > சுமுத்தாய் ;
Cited for interest.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.