Pages

ஞாயிறு, 20 ஜூலை, 2014

ககரம் காணாமற் போவது

இணையற்ற  ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பிருந்தும் சொற்கள் திரிந்துவந்துள்ளன.  அவர்காலத்தில்  பிற ஆசிரியரும் மாணவரும் அறிந்துகொள்ள விரும்பிய சொற்கள் சிலவற்றுக்கு அவர் விளக்க நூற்பாக்கள் எழுதினார் என்பதை அவர் நூலில் அறிந்துகொள்ளலாம்.

அவர் விளக்கியவற்றுள் ஒன்று:  அகம் +கை  என்ற இரு சொற்கள் புணர்ந்தால்   எப்படி வருமென்பது.

அகம் என்  கிளவிக்குக் கைமுன் வரினே 
முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும் 
வரை நிலை இன்றே ஆசிரியர்க்க 
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான 
(தொல்  எழுத்   315)

ஒழிய -  தவிர;   முன்னவை -  (கை  என்னும் சொல்லுக்கு )  முன்னின்றவை.

அகம் +  கை =  அங்கை  என்று வரும். 

இங்ஙனமின்றி,  அகங்கை என்றும் வரும்.

மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான  : 

ஙகர  ஒற்றாகிய மெல்லெழுத்து  ஈரிடத்தும் தோன்றும் என்பது பொருள்.

அங்கை என்பதில் ககரம்  காணாமற் போயிற்று என்பதறிக


ஆசிரியர்க்க  என்பது அச்சுப் படியில்  உள்ளது. ஆசிரியர்க்கு என்பது போலும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.